Type to search

Headlines

குடும்பஸ்தர் படுகொலை

Share

வடமராட்சிப் பகுதியில் வீதியில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் கத்தியால் கழுத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வியாபாரி மூலைப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நான்கு மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த கணேசலிங்கம் நடேசலிங்கம் (வயது-39) என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியால் சென்று கொண்டிருந்த குடும் பஸ்தரை துரத்திச் சென்ற கொலையாளி கூரிய கத்தியினால் அவரின் கழுத்தினை கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்துள்ளார்.

கொலை செய்த நபரான அதே இடத்தைச் சேர்ந்த 39 வயதுடையவர் பருத்தித் துறை பொலிஸில் சரணடைந்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்டவரின் சடலம் மரண விசாரணைக்காகவும் பிரேத பரி சோதனைக்காகவும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link