Type to search

Headlines

எதிர்வரும் 6 மாதத்துக்குள் அரசை கவிழ்ப்போம்

Share

எதிர்வரும் ஆறு மாத காலத்திற்கு முன்னர் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க போவ தாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எந்த வகையிலும் மேலும் ஆறு மாதங்களுக்கு இந்த அரசாங்கம் முன் நோக்கி செல்ல இடமளிக்க போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட்டிடம் ராஜித இதனை குறிப்பிட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற வரவேற்பறையில் நசீர் அஹமட்டுடன் உரையாடியுள்ள ராஜித சேனாரத்ன, ஆறு மாதங்களுக்குள் அரசாங்கத்தை கவிழ்க்க உள்ளதால், அரசாங்கத்துடன் இணைவது குறித்து எண்ணிக்கூட பார்க்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link