Type to search

Editorial

வேற்றுமை மறந்து நாம் ஒன்றுபட வேண்டிய நேரம்

Share

தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், ஓரறிவு கொண்ட மரங்கள் என இவையனைத்துக்கும் பலமும் பலவீனமும் இருக்கவே செய்கிறது. இஃது இறைவனின் படைப்பு.

அந்தவகையில் சிங்கத்தின் பலம் அதன் பிடரியில் உள்ளது. யானைக்குத் துதிக்கை பலம், மானுக்கு கொம்பு, கழுகுக்கு அலகு, பாம்புக்குப் பல்லு இவ்வாறு ஒவ்வொன்றுக் கும் ஒவ்வொரு பலம் இருக்கிறது.

இதை நாம் கூறும்போது ஐயா! தற்போது தமிழர்களுக்கு ஏதும் பலம் உண்டா? என்று நீங்கள் யாரேனும் கேட்கலாம்.

அவ்வாறு கேட்டால் நிச்சயமாகப் பலம் உண்டு. அது எதுவெனில் ஒற்றுமை என்பது தான் எங்களின் பலமாகும்.

எனவே தமிழர்களாகிய நாம் ஒற்றுமை என்பதை இழப்போமாக இருந்தால், அதன் விளைவு எங்கள் இனத்தை நாமே வேரறுப்பதாக இருக்கும்.

எனவே யார் எந்தப் பக்கமாக இருந்தாலும் நாம் தமிழர் என்ற இனத்தின் பேரால் தமிழ் இனம் சார்ந்து நாம் அனைவரும் ஒற்றுமைப்பட வேண்டும்.

இதற்கான சந்தர்ப்பத்தை சமகால சூழ்நிலை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில், தமிழ் மக்களாகிய நாம் ஒன்றுபட்டு எங்களின் பலத்தைக் காட்டுவோ மாக இருந்தால், எங்களுக்கான விடிவு அதிக தொலைவில் இல்லை என்பதை சத்தியம் செய்யலாம்.

இங்கு ஒற்றுமை என்பது பலவாறாக ஏற்பட முடியும். அதில் ஒன்று எங்களுக்குள் பேதமை இல்லை என்பதை நாம் நிரூபித்துக் காட்டுவதாகும்.

தமிழனைக் கொண்டு தமிழனை வெட்டிச் சரித்து தமிழ் இனத்தை நிர்மூலமாக்க நினைக் கின்ற பேரினவாதத்தின் கபடத்தனத்துக்குத் தொடர்ந்தும் தமிழினம் இரையாக முடியாது.
இந்த உண்மையை உணர்ந்து கொண்டு நாம் அனைவரும் ஒற்றுமைப்பட்டு செயலாற்ற வேண்டும்.

இந்த ஒற்றுமைக்கான ஓர் அடித்தளத்தை ஆரம்பித்து வைக்கக்கூடிய சந்தர்ப்பம் வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரனுக்குக் கிடைத்துள்ளது.

ஆம், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றை டெனீஸ்வரன் தாக்கல் செய்திருந்தார்.

அவர் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு உட்பட்டிருக்கக்கூடிய நிலையில், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் அவலத்தை பாராளுமன்றத்தில் பட்டவர்த்தனமாக முன்வைப்பது கண்டு, சர்வ தேசம் நம்மை நோக்கி திசை திரும்புகிறது.

இந்நிலையில் நாம் ஒற்றுமையாக உள் ளோம் என்பதை உறுதி செய்ய வேண்டியது கட்டாயம் என்பதால், சட்டத்தரணி டெனீஸ்வரன் அவர்கள் தமிழன் எப்போதும் ஒற்று மையாக இருப்பான் என்பதை தனது செயலால் நிரூபித்துக் காட்ட வேண்டும் என்பதே ஒட்டுமொத்தத் தமிழர்களினதும் பெரு விருப்பமாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link