வீடு திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளி ஒருவர், கூரை சீமெந்துத் தளம் சரிந்ததில் அதற்குள் சிக்குண்டு பரிதாபமாக உயிரிழந்தார். சுன்னாகம், அம்பனைப் பகுதியில் நேற்று பிற்பகல் இந்தச் சம்பவம் இடம் பெற்றது. இதில் நவாலி கலையரசி லேனைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான அல்ரர் போல் (வயது-42) ...
ராஜபக்ஷர்களின் குடும்பப் பலத்தை பாதுகாக்கவே புதிய அரசியலமைப்பு திருத்தத்தை அரசாங்கம் கொண்டுவர முயற் சிக்கின்றது என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான், அரசாங்கம் ஜனநாயக தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவர முயற்சித்தால் அதற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் கூறினார். ...
வரணி இயற்றாலை பகுதியில் வாள் வெட்டு காயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்த இளைஞர் ஒருவர் பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க் கிழமை இரவு 7.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இதில் சாந்தகுமார் சதுசன் வயது 20 என்பவரே ...
இலங்கையில் புகையிலை சார்ந்த பொருட்கள் விற்பனை, காட்சிப்படுத்தல் மற்றும் பொதுப் பயன்பாடு ஆகியவற்றுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்துகள், புகையிலை மற்றும் ஆல்கஹால் தடுப்புக்கான புதிய செயற்றிட்டத்தை உரு வாக்கும் பயிற்சி திட்டத்தில் நேற்று திங்கட்கிழமை உரையாற்றும்போதே புகையிலை மற்றும் ஆல்கஹால் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் ...
பேத்தியின் பூப்புனித கொண்டாட்டத்தின்போது தாத்தா உயிரிழந்த சோக சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி கல்மடுநகர் பகுதியில் நேற்று முன்தினம் பூப்பூனித நீராட்டு விழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றிருந்த சமயம் பேத்தியின் நீராட்டு விழா கடமையில் இருந்த பேத்தியின் தாத்தா திடீரென கிழே விழுந்து உயிரிழந்துள்ளார். இதில் அதே ...
அங்கஜனுக்கு அமைச்சுப் பதவி வழங்கி அவரைப்பலப்படுத்தி விக்னேஸ்வரனுக்கு முடிவு கட்டுவோம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல்வீரவன்ஸ தெரிவித்துள்ளார். ஹோமாகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், விக்னேஸ்வரன் பாராளுமன்றுக்கு வந்து உலகிலேயே மூத்த மொழி தமிழ் மொழி ...
வவுனியா, பெரியதம்பனை பகுதியில் வீட்டு அறை ஒன்றில் பூட்டி வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட 7 வயது சிறுமி செட்டிகுளம் பிரதேச செயலக பெண்கள், சிறுவர் பிரிவு உத்தி யோகத்தர்களால் நேற்று மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, செட்டிகுளம், பெரியதம்பனை, மருதங்குளி பகுதியில் உள்ள வீடு ...
உலக நாடுகளையெல்லாம் உலுக்கி வருகிற கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற் கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்க மருந்து நிறுவனம் ஒன்று, கொரோனாவை தடுக்கும் களிம்பு ஒன்றை உருவாக்கி உள்ளது. இதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதன்பேரில் இந்த ...
ஆவா குழுவைச் சேர்ந்த சந்தேகத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் களிடம் இருந்து 60 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப் பாணம் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஆவா குழுவைச் சேர்ந்த சந்தேகநபர்கள் என்ற குற்றச்சாட்டில் 6 பேரை பொலிஸார் ...
வடமராட்சிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இமையாணன் வெள்ளைறோட் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீதே நேற்று முன்தினம் சனிக்கிழமை நள்ளிரவு பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வீட்டிலிருந்தவர்கள் நித்திரைக்குச் சென்ற சமயம் பாரிய வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் இதனைத் ...