அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற முன்வருமாறு வடக்கிலுள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கு கல்வி அமைச்சரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முன்னணியின் தவிசாளருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அழைப்பு விடுத்துள்ளார். அஸ்கிரிய மற்றும் மல்வத்துப்பீடங்களின் தலைமைத் தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்ட பின் செய்தியாளர் களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே கல்வியமைச்சர் ...
வவுனியா கனகராயன் குளம் பகுதியில் காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் நேற்றுக் காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றின் அருகாமையில் சடலம் ஒன்று இருப்பது தொடர்பாக கனகராயன்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தினை அடையாளப்படுத்தியதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த ...
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் இருந்து பல மோட்டார் குண்டுகள் நேற்று முன்தினம் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரி வித்துள்ளனர். யாழ். அரியாலைப் பகுதியில் உள்ள வெற்றுக் காணியொன்றில் இருந்து மோட்டார் குண்டுகள் இருப்பதை அப்பகுதியில் உள்ளவர்களினால் நேற்று முன்தினம் கண்டறியப்பட்டது. உடனடியாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து பொலிஸாரும் ...
யாழ்.போதனா வைத் தியசாலையில் 101 பேருக்கு நேற்று நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 6 பேருக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு- கேப்பாபிலவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 6 பேருக்கே கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் பேச்சாளரை மாற்றுவதற்கு கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் நேற்று சந்தித்து கலந்துரை யாடியபோது, இந்த முடிவிற்கு வந்தனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் நேற்று மாலை இடம்பெற்ற ...
யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் நேற்றைய பாராளுமன்ற அமர்வு இடம்பெற்றிருந்தது. பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக அங்கஜன் இராமநாதன் நியமிக்கப் பட்டிருந்தார். நேற்று ஜனாதிபதியின் கொள்கை உரை மீதான விவாதம் பாராளுமன்றில் இடம்பெற்றிருந்தது. இதற்கு பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரான அங்கஜன் இராமநாதன் தலைமை தாங்கியமை ...
தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பணியில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்ந்து இருக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பில் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப் பிற்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கு மிடையில் நேற்று மாலை சந்திப்பு இடம் பெற்றது. இந்த சந்திப்பு ...
பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆசிரியை ஒருவரின் தங்கச்சங்கிலி மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறிக் கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் அல்வாய், செல்லையா வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. அல்வாய்ப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை பாடசாலை நிறைவடைந்ததன் பின்னர் மோட்டார் சைக்கிளில் ...
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை கள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பி. பூஜித்த தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர் வரும் 31ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படு மென பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார். பாடசாலை பரீட்சார்த்திகள் ...
வலம்புரியின் அலுவலகச் செய்தியாளர் விஜயநாதன் ஜனார்த்தன் (வயது – 20) இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று மாலை 6.15 மணி யளவில் யாழ்ப்பாணம், பிறவுண் வீதி, இரண்டாம் ஒழுங்கையில் இடம்பெற்றது. பணி முடிந்து வலம்புரி அலுவலகத்தில் இருந்து ஜனார்த்தன் மோட்டார் சைக்கிளில் தனது சொந்த இடமான ஊரெழுவுக்குப் புறப்பட்ட ...