தற்போது மேற்கொள்ளப்படும் சுகாதார பாதுகாப்பு வேலைத் திட்டங்கள் இதேவிதத்திலேயே முன்னெடுக்கப்பட்டால், எதிர்வரும் 20ஆம் திகதிக்குப்பின் ஊரடங்குச் சட்டத்தை பகுதி பகுதியாக நீக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைவர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும் கொரோனா வைரஸ் காரணமாக அதிக ...
கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகமாக உயிரிழந்தவர்களின் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திற்கு வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரையிலும் இத்தாலி முதலிடத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது அமெரிக்கா அந்த பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. இதன்படி, கொரோனா வைரஸ் தொற்றினால் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,304 பேர் ...
பாடசாலை இரண்டாம் தவணை மே 11, திங்கள் ஆரம்பமாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இதற்கு முன்னர் பாடசாலை இரண்டாம் தவணை ஏப்ரல் மாதம் 20, திங்கள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் ...
யாழ்ப்பாணம் அரியாலை தேவாலயத்தில் இடம்பெற்ற சுவிஸ் போதகரின் ஆராதனையில் பங்கேற்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் வட்டுக்கோட்டையில் தங்கிருந்த நிலையில் அவர்கள் 20 நாட்களின் பின்னர் கண்டறியப்பட்டு நேற்று முன்தினம் வீட்டில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். இவ்வாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். ...
பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் காலம் நீடிக்கப்படலாம் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைள் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள போதும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய மேலும் தாமதமடையலாம் என அமைச்சின் செயலாளர் என்.எச்.சித்ரானந்த தெரிவித்துள்ளார். ...
அத்தியாவசிய உணவு வழங்கள், அரிசி உற்பத்தி, களஞ்சியப்படுத்தல், விநியோகித்தல் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அத்தியா வசியமானது என்பதால் அனைத்து நெல் ஆலை உரிமையாளர்களினதும் சேவைகள் கோவிட் – 19 நோய்த்தடுப்பு அத்தியாவசிய சேவையாக மீண்டும் அறிவிக்கும் வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள அனைத்து அரிசி ஆலை களினதும் உரிமையாளர்கள் தாம் ...
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையிலும் நாட்டினை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கும் இலங்கை சமூக வைத்திய நிபுணர்கள் சங்கம் யோசனைகளை முன்வைத்துள்ளது. அபாய வலயங்கள் தொடர்பில் ஆய்வு செய்து, ஏனைய பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டத்தை இலகு படுத்துவது ஏற்புடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ நிலையங்கள், மருந்தகங்கள், பல்பொருள் ...
யாழ்ப்பாணம் உட்பட இடர்வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்களில் கொரோனா அறிகுறிகள் எதுவுமின்றி மக்களோடு மக்களாக உள்ள கொரோனா தொற்றாளர்களைக் கண்டுபிடிக்க, பொதுமக்களிடையே பரிசோதனைகளை முன்னெடுக்க சிறப்புச் செயற்றிட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் தொற்று நோயியல் நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கொரோனா ...
கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பில் இடர் வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் 14ஆம் திகதி ...
பூநகரியைச் சேர்ந்தவரும் லண்டனில் வசிப்பவருமான ஊடகவியலாளர் தில்லைநாதன் ஆனந்தவர்ணன், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்துள்ளார். 30 வயதுடைய ஆனந்தவர்ண்ணன், பூநகரியின் முன்னைநாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் தில்லைநாதனின் மகனாவார்.