குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கட்டார் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து மொத்தமாக 745 இலங்கையர்கள் நேற்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். அதன்படி கட்டார், டோஹாவிலிருந்து கட்டார் எயார்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான ஞசு-668 என்ற விமானத்தின் மூலம் 20 இலங்கையர்கள் நேற்று அதிகாலை 1.31 மணியளவில் கட்டுநாயக்க ...
புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 3 நாட்கள் விசேட பயிற்சி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார். ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டம் நேற்று முன்தினம் இடம்பெற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 9 ஆவது பாராளுமன்றம் ஜனநாயமிக்கது ...
ஒன்பதாவது பாராளுமன்றின் முதல் அமர்வு நேற்றுக் காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது. இந்நிலையில் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கு முதன் முறையாக பாரா ளுமன்ற உறுப்பினர் கோட்டே மதுர விதானகே படகு மூலம் பாராளுமன்றுக்குச் சென்றுள்ளார். பாராளுமன்றுக்கு இவ்வாறு வருகை தந்த அவர், படகு மூலம் தாம் வருவதற்கு ...
ஒரே நாடு என்ற கொள்கையின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கொள்கைப் பிரகடன உரையில் தெரிவித்தார். இதன்போது ஜனாதிபதி மேலும் கூறுகையில், ஒரே நாடு என்ற கொள்கையின் அடிப்படையில் புதிய ...
கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்திற்கு உட்பட்ட கல் மடுநகர் றங்கன்குடியிருப்பு பகுதியில் தொடரும் காட்டு யானை தொல்லையால் அன்றாடம் பெரும் கஷ்டங்களை எதிர்கொள்வதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்தனர். கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கல்மடுநகர் றங்கன் குடியிருப்பு பகுதியில் தற்போது சுமார் 110 குடும்பங்;கள் உள்ளன. அவர்கள் ...
வவுனியா நகரசபை வளாக த்தில் நேற்று முன்தினம் நகர சபையினரினால் துவிச்சக்கர வண்டிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டது. நூலக வீதி , பூங்கா வீதி , நகரசபை வீதியூடாக பயணித்த துவிச்சக்கரவண்டிகளை நகர சபையினர் வழிமறித்து துவிச்சரவண்டிகளுக்கான உரிமத்தினை 15ரூபாய் கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தனர். உரிமைப்பத்திரத்தில் துவிச் ...
தெல்லிப்பழை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், நலன்புரிச் சங்கத்தின் ஸ்தாபகரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாமனிதர் சி.சிவமகா ராசாவின் பதினான்காவது ஆண்டு நினைவு தினம் இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் தெல்லிப்பழைப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் ...
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் தர்மக்கேணி என்னும் கிராமத்தில் வயல் விதைப்பு செய்வதற்காக காணி துப்புரவு பணியில் ஈடுபட்ட போது காணி உரிமையாளரால் சில வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் காணி உரிமையாளரால் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட் டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் வெடி பொருட்களை ...
துன்னாலைப் பகுதியில் இடம்பெற்ற கோஷ்டி மோதல் சம்பவம் ஒன்றில் படு காயமடைந்த மூவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் சனிக்கிழமை நள்ளிரவு இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. இரு பகுதியினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் துன்னாலை தெற்கைச் சேர்ந்தவர்களான தங்கவேல் தங்கேஸ்வரன் (வயது – ...
நாட்டில் நேற்றைய தினம் 104 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் கந்தக்காடு போதைப் பொருள் புனர்வாழ்வு மையத்தில் இருந்து சேனபுர மத்திய நிலையத்திற்கு மாற்றப்பட்ட 76 கைதிகளும் அவர்களுடன் தொடர் பினைப் பேணிய 14 பேரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் ராஜாங்கனையில் கொரோனா ...