காலிமுகத்திடல் கடலில் நீராடச் சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் நேற்று (10) பிற்பகல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. மாளிகாவத்தை பகுதியிலிருந்து வருகை தந்த சுமார் 15 வயதுடைய பாடசாலை மாணவர்கள் குழுவொன்றே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளது. 6 ...
கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 பேர் கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் கடற்படை தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார். 2008ஆம் ஆண்டில் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேகநபரான ...
2018ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 267,138 குழந்தைகள் பாடசாலை கல்வியை இடை நிறுத்தியுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர், 2010 முதல் 2017ஆம் ஆண்டின் முற்பகுதி வரை பாடசாலை கல்வியை இடைநிறுத்திய குழந்தைகள் குறித்த துல்லியமான தரவுகள் ...
இசைக் கலைஞரான சங்கீதனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமாரவுக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரனுக்கும் இடையில் தொலைபேசி உரையொன்று நடைபெற்றுள்ளது. இந்த உரையாடலுக்கு அமைவாக, சங்கீதனுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்படாமையின் காரணமாக சாதாரண நீதிமன்ற முறைமையின் கீழ் அவருக்கான பிணைக்கோரிக்கையை ...
மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (10) பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மாகாண எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்று அதற்கு ...
இலங்கை அதிபர் சேவையின் அதிகாரிகள் பல வருடங்களாகக் கோரி வந்த சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்கி, அவர்களின் ஆரம்பச் சம்பளப் படியை முறைப்படுத்துவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் 03/2014 (I) என்ற புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2026 மே மாதம் 11ஆம் திகதி நடைபெற்ற ...
லங்கா சதொச நிறுவனம் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, நாளை (10) முதல் இந்த புதிய விலை திருத்தங்கள் அமலுக்கு வரும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பெரிய வெங்காயம், வெள்ளைச் சீனி, பருப்பு, ...
ஒவ்வொரு நாட்காட்டி மாதத்திலும் இலங்கைக்குள் ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் அனைத்துப் பொருட்களின் ஏற்றுமதியாளர்களும், அந்த வருமானத்தில் எஞ்சிய தொகையை அடுத்த மாதத்தின் 10 ஆம் திகதிக்கு முன்பதாகவோ அல்லது அன்றைய தினத்திற்குள்ளோ கட்டாயமாக இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டும் என இலங்கை மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது. ஏற்றுமதியாளர்கள் தங்களுக்குக் ...
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் மனைவியான மனோரி சலே, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார். சுரேஷ் சலேவுக்கு எதிராக அமுல்படுத்தப்பட்டுள்ள தடுப்புக்காவல் உத்தரவை உடனடியாக ரத்துச் செய்யுமாறு அந்த கடிதத்தின் மூலம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், சுரேஷ் சலேயை ...
புத்தளம், வனாத்தவில்லு, காரைதீவு பகுதியில் அமைந்துள்ள பிரதான பயிர்ச்செய்கை நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான முந்திரி தோட்டத்தில் நபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மீது துப்பாக்கி பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வனாத்தவில்லு பொலிஸார் தெரிவித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை (09) அதிகாலை வேளையில் இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து வனாத்தவில்லு பொலிஸ் ...