இன்று (07) நள்ளிரவு முதல் ரைஸ், பிரியாணி மற்றும் நாசிகுரென் ஆகிய உணவு வகைகளின் விலைகளை 25 ரூபாவினால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்தி நடத்தப்படும் சிற்றுண்டிச்சாலைகளில் சாதாரண தேநீர் மற்றும் பால் தேநீரின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் ...
குருநாகல் மாநகர சபையில் நிலவும் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திர தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை அவர் நேற்று (06) குருநாகல் மேயர் சட்டத்தரணி ஆனந்த சஹபந்துவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார். மாநகர ...
செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இன்றுவரை 256 மனித என்புகூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். செம்மணி சித்துப்பாத்தி மனிதபுதைகுழியின் 3ஆம் கட்ட அகழ்வுப் பணி கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிக்கபட்டது. இரு நாள்கள் துப்புரவுப் பணிகள் இடம்பெற்ற பின்னர் அகழ்வுப் பணிகள் ...
ஜனாதிபதி தலைமையிலான இந்த அரசாங்கம் எப்படி பொய்களை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்ததோ அதே போன்றுதான் இந்தியாவில் தமிழ்நாட்டில் விஜய்யும் பொய்களை அள்ளி வீசி தற்போது ஆட்சிக்கு வந்துள்ளார். அவருக்கும் ஆட்சியை கொண்டு செல்ல முடியுமாக இருக்குமோ என்று தெரியவில்லை. அந்தளவுக்கு பொய்யான வாக்குறுதிகளை வாரி இறைத்துள்ளார் என ...
களுத்துறை வங்கியொன்றில் 15 கோடி ரூபா நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் வங்கியின் இரு பெண் பிரதான அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் களுத்துறை, கொஹோலான சனச வங்கியின் மேலாளர் மற்றும் அதன் செயலாளர் ஆவர். வங்கியின் கணக்காய்வு அறிக்கையின்படி, வங்கியிலிருந்த மொத்த வைப்புத்தொகை 170 ...
விசா நிபந்தனைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்து, சட்டவிரோதமான முறையில் நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த வெளிநாட்டுப் பிரஜைகள் 74 பேர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று புதன்கிழமை (06) மாலை, கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உத்தராநந்த மாவத்தை பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பொலிஸ் குழுவினரால் ...
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாப் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 12.5 கிலோ எடைகொண்ட எரிவாயுவின் விலை 545 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 6245 ரூபாவாகும். 5 கிலோ எடைகொண்ட எரிவாயுவின் விலை 220 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய ...
இந்த மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 4,765 ரூபாய்க்கு தொடர்ந்தும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு விலை 1910 ரூபாவாக காணப்படும். ...
யாழ்ப்பாணம் – வேலணை புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தனியார் விடுதியொன்றுக்கு சொந்தமான பேருந்து ஒன்றுடன், மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று (6) முற்பகல் மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 21வயதுடைய ...
2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று (06) உறுதி செய்தது. மூவரடங்கிய மேல் நீதிமன்ற தீர்ப்பாயத்தினால் ...