கூட்டுறவுத் திணைக்களத்தால் அபி எனதுரு கெதர இன்ன அதாவது நாம் வரும் வரை வீட்டில் இருங்கள் என்ற பெயரில் ஆரம்பிக் கப்பட்ட உலர் உணவுப் பொருட்களை வீட்டுக்கு வீடு சென்று விற்பனை செய்யும் வேலைத்திட் டம் மேல் மாகாணத்தில் ஆரம்பிக் கப்பட்டது. இந்தத் திட்டம் நேற்று முன் தினம் ...
ஊரடங்குச் சட்டத்தால் வாழ் வாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட குப்பிழானைச் சேர்ந்த 47 குடும் பங்களுக்கு குப்பிழான் விக் னேஸ்வரா விளையாட்டுக் கழக இளைஞர்களால் ஒருதொகுதி உலர் உணவுப் பொருட்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வீடுகளுக்குச் சென்று இவ்வாறு உதவிகள் வழங்கப்பட்டன.
யாழ்.மாநகர சபை எல்லைக் குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி நேற்றும் முன்னெடுக் கப்பட்டது. யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பணி குருநகர் சந்தைப் பகுதி உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் முன்னெடுக்கப்பட் டது. விசேட அதிரடிப் படையினரின் கொழும்பிலிருந்து ...
அவசர உதவிகள் தேவைப் படும் பொது மக்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ஊரடங்கு நேரங்களில் உதவி வழங்குவதற்கும், பொது மக்களின் வாழ்விடங்களுக்கு வர்த்தகர்கள் நேரடியாகச் சென்று நடமாடும் வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்வ தற்கும் அனுமதி வழங்குவது தொடர்பான அவசர கலந்துரையா டல் கடந்த செவ்வாய்க்கிழமை கொடிகாமம் பொலிஸ் நிலையத் ...
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையால் குறித்த பணிமனைக் குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பது குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குப்பிழான் விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தின் அனு சரணையில் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை யால் ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு ...
யாழ். மாவட்டத்தை ஐந்து வலயங்களாகப் பிரித்து ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியுமென அகில இலங்கை சைவ மகா சபை ஆலோசனை முன்வைத்தது. ஊரடங்குச் சட்டம் அமுல்படுத் தப்பட்டபோது மக்கள் நடந்துகொண்ட விதத்தை தக்க பாடமாக எடுத்துக் கொண்டு ...
நாட்டில் நடை முறைப் படுத்தப்படும் ஊரடங்கா னது அது தளர்த்தப்படும் காலப்பகுதியில் அர்த்தம ற்றதாகிவிடுகின்றது என யாழ். மாநகர சபை முதல் வர் இ.ஆனல்ட் ஆதங் கத்தை வெளியிட்டார். நேற்று முன்தினம் இடம் பெற்ற ஊடகவியலா ளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாணம் உட்பட வடமாகாணத்தில் ...
ளநாட்டில் ஏற்பட்டுள்ள தற் போதைய இக்கட்டான சூழ்நிலை யில் பிள்ளைகள் தொடர்பில் சுகா தாரம்-பாதுகாப்பு, கல்வி ஆகிய இரு விடயங்களிலும் பெற் றோர் கள் விஷேட கவனம் செலுத்த வேண்டும் என யாழ்ப்பாண வலயக் கல்விப்பணிப்பாளர் செ.சந்திரராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங் களுக்கு அனுப்பி ...
இலங்கையை சேர்ந்த நபரொருவர் பிரான்ஸ் நாட்டில் கொரோனா நோய் தாக்கத்திற்கு இலக்காகிய நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்று முன்தின மிரவு உயிரிழந்துள்ள நிலையில் அவரின் உடலை குடும்பத்தாரிம் ஒப்படைக்க பொலிஸார் மறுத்துள்ள தாக தெரியவருகிறது. யாழ். தாவடி கொக்குவில் வேம் படி முருகமூர்த்தி கோயிலடியைச் சேர்ந்த குணரட்ணம் ...
நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளது