சுமார் 36 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா பெறுமதியான சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்த இரண்டு சீனப் பிரஜைகள் இன்று (05) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 23 மற்றும் 24 வயதுடைய சீன ...
எரிபொருள் விநியோகத்தில் நிலவும் சிக்கல்கள் மற்றும் இலாபப் பங்கு குறைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாட்டின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் நாளை முற்பகல் 9.30 மணி முதல் (06) இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு முன்னால் அமைதிப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர். எரிபொருள் விநியோகத்தின் போது பின்பற்றப்படும் ஒற்றை மற்றும் ...
வடக்குக்கான புகையிரத சேவைகள் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி தி. பிரதீபன் தெரிவித்துள்ளார். மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரதப் பாதையில் ஐந்து புகையிரதப் பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையைப் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும் ஏதுவாக, ...
இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை விரிவுபடுத்தும் நோக்கில், 5,000 ரூபாவிற்கும் குறைவான கியூ.ஆர். (QR) பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (06) முதல் எவ்விதக் கட்டணமும் அறவிடப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜனாதிபதியினால் நாளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ள இந்தத் திட்டத்தின் கீழ், பணம் அனுப்புபவர் அல்லது பெறுபவர் என இருவரிடமிருந்தும் மேலதிக ...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரின் 2010 முதல் 2015 வரையான காலப்பகுதிக்குரிய சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரங்களை சத்தியக்கடதாசி மூலம் சமர்ப்பிக்குமாறு கையூட்டல் ,ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் இந்தச் சொத்து ...
இலங்கையில் தங்கியிருந்து சர்வதேச ரீதியாக இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த 156 வெளிநாட்டவர்கள் சட்ட நடவடிக்கைகளின் பின்னர் அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (03) சிலாபம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து இந்த 156 பேர் ...
வடக்கில் பல மாதங்களாக இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்தும் வங்கிகளில் வைப்புக்களில் இருப்பதுமாக சுமார் 50 பவுண் நகைகள் மீட்கப்பட்டுள்ளதோடு, இவர்களால் சுமார் 150 பவுண் வரையான நகைகள் கொள்ளையிடப் பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ...
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சில பகுதிகளில் நேற்று இரவு திடீர் மின்தடை ஏற்பட்டது. நேற்றிரவு 7.00 மணி முதல் இரவு 9 மணி வரை திடீர் மின்தடை ஏற்பட்டது. யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட நாட்டின் மேலும் சில பகுதிகளிலும் முன்னறிவிப்பின்றி மின்தடை ...
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 23 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் 22 பேரும் யாழ். பல்கலைக்கழக ஆய்வு கூடத்தில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலைத் தரவுகளின் ...
யாழ்.கந்தர்மடம், மணல் தறை ஒழுங்கையில் ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் கத்தி முனையில் வீட்டிலிருந்த தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வீட்டின் வெளிப்புறத்தில் இருந்த மின்குமிழை அகற்றிய கொள்ளையர்கள் பின்னர் ...