ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மிச்சிநகர், ரெட்பானா வீதியிலுள்ள காணி ஒன்றில் வீடு கட்டுவதற்காக, நேற்று (20) அத்திவாரம் தோண்டும்போது, நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த கைத்துப்பாக்கி மற்றும் வாள் ஒன்றை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த காணியில் நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் ...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு இன்றைய தினம் (21) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 354 இலங்கை ரூபாயைக் கடந்துள்ளதுடன், அது 354.03 ரூபாயாகப் பதிவாகியுள்ளது. அதேநேரம், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ...
தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் காணாமல் போயுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் ஹிநிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார். இன்று (21) பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் பதிலளித்த போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். பண்டங்கள் கணக்கெடுப்புச் சபை ஒன்றின் மூலம், கடந்த ...
இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 128 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் மே 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியிலேயே இந்த காட்டு யானைகளின் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அவற்றில், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களினால் 20 ...
அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பினால் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் ஆகக்குறைந்த கட்டணம் 40 ரூபாவுக்கும் அதிகளவில் உயர்த்தப்படக்கூடும் என அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன நேற்று (20) ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். நாடு தற்போது பாரிய ...
நேற்று (20) நள்ளிரவு முதல் பால் தேநீரின் விலையை 5 ரூபாவினால் அதிகரிப்பதற்கு சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிப்பின் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஹர்சன ருக்ஷான் தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலைகளை அதிகரிப்பதற்குத் ...
இம்முறை சிவனொளிபாதமலை யாத்திரை காலம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரையான காலப்பகுதியில், அப்பிரதேசத்திற்கு போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற 322 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் பிரிவின் ஹட்டன், பொல்பிட்டிய, கினிகத்தேன மற்றும் நல்லதண்ணி ஆகிய பொலிஸ் நிலையங்களினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே, இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் ...
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகால பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக்காக, 1570 ஏக்கர் காணியினை விடுவிக்குமாறு மகாவலி அதிகார சபைக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட விசேட அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று (20) காலை பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ...
நாடு கடந்த காலத்தைப்போல மீண்டும் ஒருபோதும் ஒரு பொருளாதார நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். முழு நாடும் ஒன்றாக எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இலங்கை ...
இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா (கீரி பொன்னி) அரிசியை நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த முல்லேரியா பகுதியில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை (18) 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. நுகர்வோர் விவகார ...