யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பகுதியில் இருந்து கடற்றொழிக்கு சென்ற நிலையில் காணாமல் போன 4 மீனவர்களையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. நான்காவது நாளாக நேற்றும் (31) அவர்கள் தேடப்பட்ட நிலையில், அவர்கள் கண்டறியப்படவில்லை. குறித்த மீனவர்கள் கடந்த புதன்கிழமை இரவு கடல் தொழிலுக்கு சென்ற நிலையில் கரைக்கு ...
மேல், சப்ரகமுக மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (1) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை விடுத்துள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ...
மீகொடை பகுதியில் தன்சல் ஒன்றுக்காக வரிசையில் நின்றிருந்தவர்கள் மீது வாகனம் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த மேலும் 7 பேர் சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் குழந்தை ஒன்றும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ...
காலி – ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பே கடற்கரைப் பகுதியில் நீராடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி நேற்று காணாமல் போயுள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளவர் குருணாகல் – மல்லவபிட்டிய பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காணாமல் ...
யாழ்ப்பாணம் எழுவைதீவு மற்றும் அனலைதீவு பகுதிகளுக்கான பயணிகள் படகு சேவைகளில் இன்று (1) முதல் காலம் மாற்றம் செய்யப்படவுள்ளது. ஊர்காவற்றுறை பிரதேச செயலகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் துறையிலிருந்து அனலைதீவு மற்றும் எழுவைதீவு போன்ற இடங்களுக்காக இடம்பெறும் பயணிகள் படகு சேவை க்கான நேர ...
நாட்டில் மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கும், சிகிச்சைக்குப் பின்னரான பராமரிப்பை மேம்படுத்துவதற்கும், வைத்தியசாலைகளில் நிலவும் நீண்ட காத்திருப்புப் பட்டியல்களைக் குறைக்கும் முகமாகவும் 5 அதிநவீன மேமோகிராபி இயந்திரங்களை நாட்டுக்கு பெற்றுக்கொள்வதற்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. சுகாதார சேவையின் பெளதீக வளங்களை அதிகரித்து, பொதுமக்களுக்கு ...
அனைத்து அரசு நிறுவனங்களிலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை வாங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் இன்று (31) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சகம், 15 ஆம் திகதி ஒரு சிறப்புச் சுற்றறிக்கை மூலம் அனைத்து அரசு நிறுவனத் தலைவர்களுக்கும் இது குறித்துத் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முழுமையான ...
சென்னையில் உள்ள பார் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தகராறில், இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கார் ஏற்றி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு பாரில் சிலர் மது அருந்திவிட்டு நடனமாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது இரு தரப்பினரிடையே திடீரென ...
தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வெசாக் வலையமானது யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் (30) திறந்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நாக விகாரையின் விகாராதிபதி தலைமையில் வெசாக் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ் இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி, ...
‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த கிழக்கு மாகாண நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு 1.33 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் நேற்று முன்தினம் (29) கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகத்தில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் ...