நாட்டில் தொற்றா நோய்களின் தாக்கம் தீவிரமாக அதிகரித்து வருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பண்டிகைக் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், மக்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் இந்த நிலைமையை மேலும் மோசமாக்கக்கூடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தொற்றா நோய்களால் நாட்டில் ஏற்படும் மொத்த இறப்புகளில் ...
பாடசாலைகளில் விழாக்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் போது, செலவுகளைக் ஆகக்குறைந்த மட்டத்தில் பேணுமாறு கல்வி அமைச்சு அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளது. பாடசாலை நிகழ்வுகளுக்காகப் பெற்றோர்களிடமிருந்து அதிகப்படியான பணம் வசூலிக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும். எதிர்காலத்தில் நடத்தப்படும் அனைத்து நிகழ்வுகளும் மிகவும் எளிமையான முறையிலும், குறைந்த ...
ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மொரகஹஹேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. குறித்த ஹோட்டலில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்றுக்கு ...
வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் நேற்று (9) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியானார். வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதி வழியாக துவிச்சக்கரவண்டி ஒன்று பயணித்த நிலையில் பட்டானிச்சூர் பகுதியில் அதன் ஓட்டுநர் பாதையின் மறுபக்கத்திற்கு திரும்புவதற்கு முற்பட்டுள்ளார். இதன்போது அதே திசையில் பின்னால் சென்ற லொறி ஒன்று ...
வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. தரமற்ற நிலக்கரி இறக்குமதியில் 100 பில்லியன் ரூபாய் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து எதிர்க்கட்சிகளால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டு சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்றைய தினம் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை ...
அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் (10) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய பாடசாலைகளுக்கு நாளை முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான ...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (10) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. பயிற்சிக்கு பின்னர் வைத்தியர்களுக்கான நியமனங்களை வழங்குவதில் சுகாதார அமைச்சு தமக்கு வழங்கிய உடன்படிக்கைகளை மீறியுள்ளதாகத் தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று காலை 8.00 ...
வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஹந்தபானகல, கென்ஹத்த பகுதியில் மின்னல் தாக்கியதில் 23 வயதுடைய யுவதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (09) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த யுவதி, வீட்டின் அருகே உள்ள வயலில் வேலை செய்துகொண்டிருந்த தனது பெற்றோரை வீட்டிற்கு அழைப்பதற்காகச் சென்றுள்ளார். இதன்போது ...
மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வியாழக்கிழமை (09) காலை நாடு திரும்பியுள்ளார். கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி அவர் மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் நோக்கிப் பயணித்திருந்தார். முன்னதாக இலங்கையில் வைத்து ரணில் விக்ரமசிங்க அறுவை சிகிச்சை ஒன்றிற்கு உட்படுத்தப்பட்டிருந்தார். ...
வவுனியா – சொக்கடிப்புளவு கிராமத்தில் சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான சகோதரி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. செக்கடிப்புளவில் வசித்து வந்த 56 வயதுடைய பவளரத்தினம் செல்வமலர் என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் மீது அவரது சகோதர முறையானவர் மதுபோதையில் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்துள்ளார். இந்நிலையில் அங்கிருந்தவர்களின் ...