பேங்கொக்கில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த கொழும்பைச் சேர்ந்த 33 வயது இளைஞர், சுமார் 25 மில்லியன் ரூபா பெறுமதியான 2,505 கிராம் குஷ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தின் பசுமை வழி ஊடாக வெளியேற முயன்றபோது சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ...
இலங்கை அதிபர் சேவையின் தரம் 3ற்கான ஆட்சேர்ப்பு தொடர்பான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சை, மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளையதினம் நடைபெறவிருந்த குறித்த பரீட்சை, தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். புதிய பரீட்சை திகதி பின்னர் அறிவிக்கப்படும் ...
திறைசேரி ஊடாக அண்மையில் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் ஹேக்கர்களினால் (Hackers) கைகளுக்கு சென்ற சம்பவம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, இளைஞர் குழுவொன்று இன்று (24) நிதியமைச்சின் முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டது. அத்துடன், இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டிய நிதியமைச்சர் ...
வவுனியா பூந்தோட்டம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அண்மைக்காலமாக நள்ளிரவு நேரங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் திருட்டுச் சம்பவங்களால் பொதுமக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். பூந்தோட்டம் பகுதியில் கடந்த சில தினங்களாக மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதுடன், நள்ளிரவு வேளைகளில் வீடுகளின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை உடைத்து உள்நுழையும் நபர்கள் ...
லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியொன்றை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பான வழக்கில், கடந்த நான்கு மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, வத்தளை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று (24) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான ...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) தற்போது வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்து வருகின்றது. கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி, கொழும்பிலுள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்திற்குச் சென்றுள்ள குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், அங்கு வைத்தே இந்த வாக்குமூலத்தைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த ...
யாழ்ப்பாணம் வேலணையில், உள்ளூர் மனிதவளத்தை மேம்படுத்தும் நோக்கோடும் அவ்வூர் இளைஞர் யுவதிகளுக்கான புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் இலக்கோடும் Star Gold நிறுவனம் தனது சர்வதேச தரம் மிக்க உற்பத்திப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளது. வேலணை நகர் வங்களாவடியை அண்மித்த பகுதியில் இந்தியத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பல கோடி ரூபாய் ...
யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் வெதுப்பக உற்பத்தி பொருட்களை விற்பனைக்காக வாகனங்களில் ஏற்றி சென்றவர்களுக்கு 80ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பகுதிகளில் வெதுப்ப உற்பத்தி பொருட்கள் விற்பனை வாகனங்கள் தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனைகளை முன்னெடுத்தனர். அதன் போது, உரிய முறையில் ...
முல்லைத்தீவு – முள்ளியவளை, மாஞ்சோலை பகுதியில் பொலிஸாரின் வாகனங்கள் மீது எரிபொருள் பவுசர் ஒன்று மோதி இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. முள்ளியவளை மாஞ்சோலை சந்திக்கு முன்பாக பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில், வீதியோரமாக பொலிஸாரின் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதன்போது, அந்த வழியாக ...
பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கிச் சென்று கொண்டிருந்த சாகரிகா ரயில் இன்று (24) காலை வாதுவ ரயில் நிலையம் அருகே தடம்புரண்டுள்ளது. இதன் காரணமாக கடலோர மார்க்கமூடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும், பாதிக்கப்பட்ட ரயில் சேவையை வழமைக்கு கொண்டு வரும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ...