சைபர் குற்றவாளிகளால் நிதி அமைச்சிலிருந்து அபகரிக்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களில், முடிந்தவரை பெருமளவான தொகையை மீண்டும் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்துள்ளார். அமைச்சின் மண்டபத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். ஹெக்கர்கள் ...
வவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற ரயில் விபத்தில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியாவில் இருந்து திருநாள்குளம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, கொழும்பு – யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ரயிலுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சம்பவ இடத்திலேயே குறித்த பெண் உயிரிழந்ததுடன், முச்சக்கரவண்டி சாரதி ...
மன்னார் – மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரம்பைக்குளம் பகுதியில் நேற்று காலை காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காட்டு யானை தாக்கியதில் காயமடைந்த நபர் முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக மடு பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பன்னிவெட்டுவான் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என அடையாளம் ...
தேசிய தடுப்பூசி திட்டத்தின் மூலம் கடந்த 15 ஆண்டுகளில் இந்நாட்டு மக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஊடாக குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் பல நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் பிரதான தொற்றுநோய் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் பாலித ...
2026ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் மாணவர்களுக்கு தேவையான அனைத்துச் சீருடைத் துணிகளும் சீன மக்கள் குடியரசின் நன்கொடையாக வழங்கி முடிக்கப்பட்டமையை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு, நேற்று இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சு வளாகத்தில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி ...
திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் உப்பாறு கங்கைப்பாலத்தருகில் தனியார் பேருந்து ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவம் நேற்று (22) மாலை இடம்பெற்றுள்ளது. திருகோணமலை மூதூர் வரையான பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்து திருகோணமலையில் இருந்து மூதூருக்கு ...
பிரதம மந்திரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க,மே 30 அன்று வெசாக் பௌர்ணமி தினத்தை அனுசரிக்கவும், மே 27 முதல் ஜூன் 2 வரை வெசாக் வாரத்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். அதன்படி, வெசாக் பௌர்ணமி தினத்தைத் தொடர்ந்து வரும் ...
முல்லைத்தீவு – துணுக்காய் வலயக்கல்விப் பணிமனையின்கீழுள்ள அம்பாள்புரம் தமிழ் வித்தியாலயத்திற்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது 2026ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 200,000 ரூபாவினை ஒதுக்கீட்டு செய்துள்ளார். பாடசாலைச் சமூகத்தின் கோரிக்கைக்கு அமைவாக, அம்பாள்புரம் தமிழ் வித்தியாலய கட்டடத்திற்கு தீந்தை பூசுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் ...
நல்லை ஆதீனத்தின் இரண்டாவது குரு மஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் திரு உருவச்சிலை நேற்றய தினம் யாழில் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீன வளாகத்தில் குறித்த சிலை அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. நல்லை ஆதீன குரு முதல்வராக விளங்கிய ...
இலங்கை கிரிக்கெட்டின் நீண்டகால தலைவர் ஷம்மி சில்வாவை பதவி விலகுமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சில்வாவிற்குப் பதிலாக, முன்னாள் ரோயல் கல்லூரி கிரிக்கெட் வீரரும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான எரன் விக்ரமரத்ன ஒரு இடைக்காலக் குழுவில் நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகின்றன. ...