நிதியமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்சவின் மரணம் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். குறித்த இரண்டு பொலிஸ் குழுக்களும் இரண்டு பிரதம பொலிஸ் ஆய்வாளர்களின் மேற்பார்வையின் கீழ் களமிறக்கப்பட்டுள்ளன. ரங்க ராஜபக்சவின் உடலம் ...
சுகாதாரத் துறையினரின் பாதுகாப்பு தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் நிலையில், பெண் வைத்தியர்களின் கௌரவத்தைப் பாதுகாக்க சுகாதார அமைச்சு தவறிவிட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கொழும்பில் ...
திறைசேரியினால் அவுஸ்திரேலிய கடன் வழங்குநருக்கு அனுப்பப்பட்ட 2.5 மில்லியன் டொலர்கள் காணாமல் போனமை தொடர்பில், நிதியமைச்சுக்கு ஒரு மாதக்கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அரச நிதி பற்றிய பாராளுமன்ற குழுவின் தலைவர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். முன்னதாக, அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு சம்பந்தப்பட்ட தரப்பினருக்குச் செலுத்தப்பட வேண்டிய 10 ...
வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த பிக்குகளுக்கான கட்டுப்பாடுகளை இலங்கை அரசு மேலும் கடுமைப்படுத்தியுள்ளது. புதிய நடைமுறைகளின் படி, வெளிநாடுகளுக்குச் செல்லும் பௌத்த பிக்குகள் தங்களது மூத்த பிக்கு, பிராந்திய பௌத்த தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஆகியோரிடமிருந்து பரிந்துரைகளை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் முன்பே ...
காரைநகர் கசூரினா கடற்கரையை நவீன வசதிகளுடன் கூடிய ஒரு சிறந்த சுற்றுலாத் தளமாக மாற்றியமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜே.விவேகானந்தன் தெரிவித்துள்ளார். இயற்கை இந்த வெள்ளை மணல் கடற்கரைக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை ...
2026 ஆம் ஆண்டிற்கான உலக ஊடக சுதந்திர சுட்டெண்ணில் இலங்கை ஐந்து இடங்கள் முன்னேறி, 180 நாடுகளில் 134 வது இடத்தைப் பிடித்துள்ளது. இதில் இலங்கையின் உலகளாவிய புள்ளி 40.77 ஆகும். எல்லைகளற்ற செய்தியாளர்கள் (RSF) அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் 139 வது இடத்தில் ...
சர்வதேச புலம்பெயர்வு தகவல் மையத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை மாவட்டத்தில் கடமையாற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வானது (29) இடம்பெயர்வு கொள்கை மேம்பாட்டுக்கான சர்வதேச மையத்தின் இணைப்பாளர் மொஹமட் சாமீர் தலைமையில் மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. சட்டவிரோத மனிதக் கடத்தல், பாதுகாப்பான புலம்பெயர்வு, தொழிலாளர் ...
யாழ்ப்பாணத்தில் ஒன்லைன் விளையாட்டிற்கு அடிமையான மாணவர் ஒருவர், நேற்று தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெல்லிப்பழை – வீமன்காமம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: குறித்த மாணவன் கொக்குவில் பகுதியில் உள்ள பாடசாலை ...
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி கொண்டு வரப்பட்ட 657 பழங்கால சிலைகளை அமெரிக்கா திருப்பி அளித்துள்ளது. இந்தியாவில் பல்வேறு தொன்மையான இடங்களும், சிலைகளும் உள்ளன. இந்த சிலைகளின் மதிப்பு, சர்வதேச அளவில் கோடிக்கணக்கில் இருக்கும். அந்த சிலைகளை கடத்தல்காரர்கள் திருடிச் சென்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்கின்றனர். இவ்வாறு கடத்தி ...
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில், மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு எதிர்வரும் மே 03 முதல் மே 06 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி திஸாநாயக்கவுடன் ...