தவெக ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளித்த நிலையில், தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது, அக்கட்சிக்கு 5 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவளித்த நிலையில், விஜய் ஆட்சியமைக்க மேலும் ...
இலங்கையின் காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின் நாகப்பட்டினம் நோக்கி பயணித்த பயணிகள் கப்பல் ஒன்று இயந்திர கோளாறு காரணமாக நடுக்கடலில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பயணிகள் கப்பல் நேற்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்டது. குறித்த கப்பல் நான்கு மணிநேரத்தில் நாகப்பட்டினத்தை அடைய வேண்டியிருந்தாலும், கடலில் ...
குருநாகல் மாநகர சபையின் பிரதி மேயர், பத்தரமுல்ல பகுதியில் இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 3 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற முயன்றபோது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். குருநாகல் பேருந்து நிலையம் மற்றும் பொதுக் கழிப்பறைகளைச் சுத்தம் செய்வதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக பிரதி மேயர் இந்த ...
போலி அதிகாரப் பத்திரம் ஒன்றைத் தயாரித்து, ஆஸ்திரேலிய தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனப் பங்குகளை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை ஜூன் மாதம் 11 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்புமாறு உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு ‘அரகலய’ போராட்டத்தின் போது இடம்பெற்ற வன்முறைகளில் வீடுகள் எரிக்கப்பட்டமைக்காக, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சட்டவிரோதமான முறையில் இழப்பீடு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இந்த வழக்குத் ...
கொட்டபொல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அண்மையில் பதிவான காய்ச்சல் ஒரு வைரஸ் நிலை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாத காலத்தில் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்ட 47 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் ...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (09) அதிகாலை வேளையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையின் தீயணைப்புப் படையினர், வைத்தியசாலை ஊழியர்கள், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் பொலிஸார் எனப் பல தரப்பினரும் இணைந்து தீ அணைப்பில் ஈடுபட்டதாக எமது ...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்சவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் ஆரம்பகட்ட ஆட்சேபனைகள் மீதான உத்தரவு, எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (08) அறிவித்தது. கொழும்பு மேல் ...
2009ஆம் ஆண்டு முதல் 2026 ஏப்ரல் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நிலக்கரி இறக்குமதி தொடர்பான முறைகேடுகளைக் கண்டறிய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணை ஆணைக்குழு, தனது ஆரம்பகட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது நிலக்கரி இறக்குமதி, நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்தல் மற்றும் அது சார்ந்த ஏனைய ...
வவுனியாவிலிருந்து புதுக்குடியிருப்பு வரையான அஞ்சல் விநியோக சேவைகள், பல வருடங்களுக்குப் பிறகு இன்று (08) முதல் மீண்டும் வவுனியா அஞ்சல் திணைக்களத்திற்குச் சொந்தமான வாகனத்தின் மூலம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த பல வருடங்களாக வவுனியா அஞ்சல் திணைக்களத்தில் போதிய வாகன வசதிகள் இல்லாமையினால், அஞ்சல் பொதிகள் மற்றும் கடிதங்களை ...