புதிய தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தமது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது, இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாசாரம், வணிகம் மற்றும் தலைமுறை தலைமுறையாகத் தொடரும் மக்களுக்கிடையிலான நெருக்கமான உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளன. இலங்கையும் இந்தியாவும் மென்மேலும் ...
ஹஷீஷ் போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்தி வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட இலங்கையர் ஒருவர் இன்று (10) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞராவார். சந்தேகநபர் இன்று ...
பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமை காரணமாக, ஏற்கனவே மூடப்பட்டிருந்த தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட நான்கு பாடசாலைகளைத் தொடர்ந்தும் மூடி வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைக்கமைய, நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெனியாய வலயக் கல்விப் பணிப்பாளர் நிஷாகா ...
புதிய சரித்திரம் படைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சற்றுமுன்னர் பதவியேற்றார். பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரி தமிழகத்திற்கு பொறுப்பான ஆளுநருடன், விஜய் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதனையடுத்து ஆட்சியமைப்பதற்கான அனுமதியை தமிழக ஆளுநர் வழங்கினார். ...
மலையகத்தில் முதல் முறையாக பாடசாலைகளுக்கிடையிலான கடினப்பந்து கிரிக்கெட் போட்டியானது கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் நாவலப்பிட்டிய கதிரேசன் மத்திய கல்லூரி என்பவற்றுக்கிடையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப் போட்டிக்கான கிண்ண அறிமுக நிகழ்வு கொட்டகலை ரிஷிகேஷ் மண்டபத்தில் உத்தியோகபூர்வமாக இடம்பெற்றது. இதன்போது பிரதம அதிதியாக கொட்டகலை பிரதேச சபையின் ...
மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூதூர் போதை ஒழிப்புப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நேற்று (09) மாலை இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. இதன் போது மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ...
யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை இந்திரவிழாவின் போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது செயற்பட்ட 6 உணவு நிலைய உரிமையாளர்களுக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் அறுவருக்கு ஒரு இலட்சத்து முப்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற எல்லைக்குள் நடைபெற்ற இந்திரவிழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ...
இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, மே மாதம் 11 ஆம் திகதியளவில் அது ஒரு குறைந்த தாழமுக்கமாக வலுவடைய வாய்ப்புள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் சில நாட்களுக்குத் தொடரும் என ...
ரதுகலப் பகுதியின் புதிய ஆதிவாசித் பழங்குடியின கிராமத்தின் தலைவராக தானிகல மஹா பண்டாரலாகே நிஷாந்த குமார எத்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அண்மையில் காலமான பழங்குடியின கிராமத்தின் தலைவர், தானிகல மகா பண்டாலகே சுதா வன்னில எத்தோவின் புதல்வர் ஆவார். மறைந்த தலைவர் சுதா வன்னில எத்தோ பயன்படுத்திய வில் ...
துருக்கியின் அந்தால்யா நகரில் நடைபெறவுள்ள “மிஸ் அவ்ரா இன்டர்நேஷனல் 2026” சர்வதேச அழகிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்பதற்காக வைத்தியர் டெவினா நவீக்ஷி இன்று (10) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துருக்கி நோக்கிப் புறப்பட்டார். சுமார் 50 நாடுகளின் அழகிகள் பங்கேற்கும் இந்தப் போட்டித் தொடர், மே ...