சிலாவத்துறை, சவரியபுரம் கடற்கரை அருகே சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கடத்தி வரப்பட்ட சுமார் 2,500,000 ரூபா பெறுமதியான உலர்ந்த மஞ்சளுடன் இருவர் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைவாக, மன்னார் விசேட அதிரடிப்படை முகாமின் வடக்கு மாகாண விசேட ...
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவுக்கு பிணை வழங்குவதற்காக, அவரது உறவினர்கள் எனப் பொய்கூறி முன்னிலைப்பட்ட இருவரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கபில சந்திரசேனவின் பிணை நிபந்தனைகளின்படி, அவரது நெருங்கிய உறவினர்கள் மூவர் ...
மட்டக்களப்பு வாவியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் சடலங்கள் நேற்று (07) மாலை மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்ன உப்போடை பகுதியில் உள்ள வாவியில், இரண்டு சடலங்கள் மிதந்த நிலையில் கரை ஒதுங்கியிருப்பதை நேற்று மாலை 5.00 மணியளவில் அவதானித்த ...
பாடசாலை மாணவர்களிடையே காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதன் காரணமாக, தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட நான்கு பாடசாலைகளை இன்று (08) மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில், நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெனியாய வலயக் கல்விப் பணிப்பாளர் நிஷாகா ஹெட்டிகொட தெரிவித்துள்ளார். இதற்கமைய, ...
கடந்த மூன்று ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் தொடர்பாக சுமார் 12,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நேற்று (07) பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட வினா ஒன்றிற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் ...
இலங்கை ஆதிவாசிகளின் தற்போதய தலைவராக கருத்தப்படும் வன்னில எத்தோ (வயது-62) நேற்று மரணமடைந்தார். தானிகல மகா பண்டாலகே சுதா வன்னில எத்தோ என்ற இயற் பெயரை கொண்ட அவர், பொதுவாக வன்னில எத்தோ என்ற பெயரில் அடையாளப்படுத்தப்பட்டிருந்தார். மொனராகலை மாவட்டத்தின் மடுல்ல பிரிவுக்குட்பட்ட வேடுவத்தலைவராகவும் அவர் செயற்பட்டிருந்தார். காசநோயின் ...
இலங்கைத் தபால் திணைக்களம் அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 626,000 அமெரிக்க டொலருக்கும் அதிக பணம், இரண்டு சந்தர்ப்பங்களில் மூன்றாம் தரப்பு ஒன்றிற்கு மாற்றப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நேற்று முன்தினம் (06) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. மூன்று போலி மின்னஞ்சல்கள் மூலம் கிடைத்த தகவல்களின் ...
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (07) உத்தரவிட்டுள்ளது. பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க ...
போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, ஜயவர்தனபுர பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து இந்தச் சுற்றிவளைப்பு நேற்று முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட வெளிநாட்டுப் பிரஜையிடமிருந்து பின்வரும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 280 கிராம் 150 மில்லி கிராம் ...
தொடர்ந்து இரண்டாவது நாளாகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய் முன்வைத்த ஆட்சி அமைக்கும் திட்டத்தை தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் இன்று (06) நிராகரித்தார். ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக விஜய் இன்று மீண்டும் ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்தார். ஆனால் 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் ...