பணியில் நேர்மை ஒருவர் ஓடி வந்தார். இன்னொருத்தரைப் பார்த்து, “சார், உங்கள் சைக்கிளை ஒரு நாள் இரவல் கொடுங்களேன். பக்கத்து ஊருக்குப் போய்விட்டு வர வேண்டியிருக்கு” என்றார். இவர் சைக்கிளைக் கொடுத்து ‘பத்திரமாகக் கொண்டு போங்கள் என்றார். சார். இதைப் பத்திரமாகக் கொண்டு போகிறேன். கவலையே வேண்டாம். ஏனென்றால் ...
எடையற்ற நிலை “எடையைக் குறைப்பதற்கு என்ன செய்யலாம்” என்று கேட்டார் ஒருவர். “இது என்ன பெரிய விடயம் பேசாமல் புறப்பட்டு மேலே ஆகாயத்துக்குப் போய் விடுங்கள்! அங்கே போனால் உங்கள் எடை குறைந்துவிடும்!” என்றார் இன்னொருவர், இவர் வேடிக்கையாக இப்படி சொன்னாலும் கூட அவர் அப்படி சொன்னதிலே ஒன்றும் ...
அதிர்ச்சி வைத்தியம் ஒரு சீடன். வெளியூர் புறப்படுவதற்குத் தயாராக இருந்தான். ரொம்ப தூரம் போகப் போகிறான். திரும்பி வர நாளாகும். புறப்படுவதற்கான ஆயத்த வேலைகளிலே ஈடுபட்டிருந்தான். அந்த சமயம் பார்த்து இன்னொரு சீடன் அவனிடம் வந்தான். “நம் குரு உன்னை அழைத்துக்கொண்டு வரச் சொன்னார். வா!” என்று கூப்பிட்டான். ...
சிறந்தவன் யார் ஒரு ஊரிலே ஒரு ராஜா. அவருக்கு ரொம்ப வயதாகிவிட்டது. அடுத்தபடியாக ஒரு இளவரசன் பட்டத்துக்கு வரவேண்டும.; அந்த ராஜாவுக்கு மூன்று பிள்ளைகள். மூன்று பேரும் ஒன்றாகப் பிறந்தவர்கள். அதனாலே மூன்று பேருக்கும் ஒரே வயது. முன்னே பின்னே பிறந்திருந்தால் மூத்த மகனுக்கு அரச பதவியை கொடுத்துவிடலாம். ...
கனவு கண்டது யார்? ஒருநாள் காலை நேரம். ஒரு குரு (சுவாங் ட்சு) படுக்கையை விட்டு எழுந்தார். உடனே சீடர்களைப் பார்த்து, “எல்லோரும் இப்படி வாருங்கள்” என்றார். எல்லோரும் வந்தார்கள் வேகமாக! “என்ன வேண்டும் உங்களுக்கு” என்ற மாதிரி எல்லோரும் பய பக்தியோடு குருவைப் பார்த்தார்கள். குரு அந்த ...
உயில் அன்றைக்கு ஒருநாள் உயில் என்றால் என்ன? செட்டில்மென்ட் என்றால் என்ன? என்று பேசிக்கொண்டிருந்தேன். அதைக் கேட்ட சிலபேர் உயிலைப் பற்றி இன்னும் கொஞ்சம் விபரமாக பேசினால் பரவாயில்லை என்றார்கள். அதனாலே விபரம் தெரிந்தவர்களைக் கேட்டுவிட்டு அதன்பின் தான் இப்போது பேசுகிறேன். நேயர்கள் கேட்டிருந்த உயில் சம்பந்தமான கேள்விகளுக்கு ...
மனப் பதட்டம் ஒருவர் இருக்கிறார். அவர் எதற்கெடுத்தாலும் கோபப்பட்டுக் கொண்டு இருப்பார். எந்த நேரம் பார்த்தாலும் மனதுக்குள்ளே ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். சின்னப் பிரச்சினையாக இருந்தாலும் அதற்குத் தீர்வுகாண முடியாமல் குழம்பிக் கொண்டிருப்பார். தூங்கும்போது சின்ன சத்தம் கேட்டாலும் ‘திடுக்” என்று தூக்கிப் போடும். முழித்துக் ...
தலையின் விலை அசோக மன்னர் வந்துகொண்டிருக்கிறார். அவருடைய ஆலோசகர்கள் எல்லாம் பக்கத்திலே வந்துகொண்டிருக்கிறார்கள்.அந்த சமயத்திலே எதிரிலே ஒரு புத்த பிக்கு வந்தார். அசோகர் பார்த்தார். ஓடிப் போய் அவர் காலில் விழுந்து வணங்கினார். அசோக மன்னரின் தலை அந்த புத்தத் துறவியின் பாதத்திலே பட்டது. பக்கத்திலே நின்றுகொண்டிருந்த அமைச்சருக்கு ...
அளவும் அனுசரிப்பும் ஒரு ஊரிலே ஒரு ஆள் இருந்தான். தையல் கடை வைத்திருந்தான். அவனிடம் ஒருவன் ஒரு சட்டைத் துணி எடுத்துக் கொடுத்து தைக்கச் சொல்லியிருந்தான். “வரும் சனிக்கிழமை வா. வந்து வாங்கிக்கொண்டுப் போ!” என்று அவன் சொல்லியிருந்தான். அதே மாதிரி இவன் வந்தான். அவன் தைத்து வைத்திருந்த ...
இரு வழிப்பறிக் கொள்ளையர்கள் ஒரு வெளியூருக்குப் போய்விட்டுத் திரும்பி வந்துகொண்டிருக்கிறோம். இருட்டிப் போனது! காட்டுப்பாதை! கையிலே ஒரு ‘டார்ச்லைட்” வைத்துக்கொண்டிருக்கிறோம். அந்த வெளிச்சத்தைக் கொண்டு வழியைப் புரிந்து கொண்டு நடந்து வருகிறோம்! திடீர் என்று வந்து வழிமறிக்கிறார்கள் இரண்டு பேர்! வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள். நம்மிடம் இருக்கிறது எல்லாத்தையும் கொள்ளை ...