காரைநகர் கசூரினா கடற்கரை கொரோனா அச்சம் காரணமாக முடக்கப்பட்டுள்ளது. காரைநகர் கசூரினா கடற்கரையில் நேற்று முன்தினம் நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்றுகூடியிருந்தமை அவதானிக்கப்பட்டது. அவர்கள் வெளியிடங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் சுகாதார நடைமுறைகளை அவர்கள் கைக்கொள்ளாமையினால் காரைநகர் கசூரினா கடற்கரைக்கு மக்கள் செல்வதற்கு சுகாதாரத் தரப்பினரால் நேற்று தடை விதிக்கப்பட்டது.
கோவிட் தடுப்பூசி ஏற்றும் முதலாம் கட்டம் மூலம் மூன்று மாதங்கள் செல்லும் வரை கொரோனா வைரஸ் தொற்றும் வேகம் குறைவாகும். அத்துடன் தடுப்பூசி ஏற்றிக் கொண்ட முதியவர்கள் அதன் இரண்டாம் கட்ட தடுப்பூசியை பரிந்துரைக்கப்பட்ட காலத்திலேயே ஏற்றிக் கொள்ள வேண்டும் என ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீட பேராசிரியை ...
விருந்துபசாரங்கள், கூட்டங்கள் மற்றும் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை வீடு களிலும் நடத்த முடியாது என இராணுவத் தளபதியும் கோவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். நாட்டில் கொரோனாத் தொற்று தீவிர மடைந்தவரும் நிலையில் மண்டபங்கள் மற்றும் பொது இடங்களில் திருமண நிகழ்வுகள், விருந்துபசாரங்கள், கூட்டங் ...
நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் விடுமுறை மேலும் ஒரு வார காலம் நீடிக்கப் படுவதாக கல்வியமைச்சர் ஜி.எல். பீரிஸ் அறிவித்துள்ளார். நாளை திங்கட் கிழமை பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த விடுமுறை மேலும் ஒரு வார காலம் நீடிக்கப்பட்டிருக்கின்றது. இதன்படி எதிர்வரும் ...
வடக்கில் பல மாதங்களாக இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்தும் வங்கிகளில் வைப்புக்களில் இருப்பதுமாக சுமார் 50 பவுண் நகைகள் மீட்கப்பட்டுள்ளதோடு, இவர்களால் சுமார் 150 பவுண் வரையான நகைகள் கொள்ளையிடப் பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ...
மேல் மாகாணத்தை தவிர்ந்த நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் உள்ள அனைத்து தர வகுப்புக்களைக் கொண்ட பாடசாலைகள் எதிர்வரும் 15ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இதற்கமைவாக பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லையென்றும் அமைச்சர் கூறினார். மேல் மாகாண ...
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சில பகுதிகளில் நேற்று இரவு திடீர் மின்தடை ஏற்பட்டது. நேற்றிரவு 7.00 மணி முதல் இரவு 9 மணி வரை திடீர் மின்தடை ஏற்பட்டது. யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட நாட்டின் மேலும் சில பகுதிகளிலும் முன்னறிவிப்பின்றி மின்தடை ...
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 23 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் 22 பேரும் யாழ். பல்கலைக்கழக ஆய்வு கூடத்தில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலைத் தரவுகளின் ...
யாழ்.கந்தர்மடம், மணல் தறை ஒழுங்கையில் ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் கத்தி முனையில் வீட்டிலிருந்த தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வீட்டின் வெளிப்புறத்தில் இருந்த மின்குமிழை அகற்றிய கொள்ளையர்கள் பின்னர் ...