கொரோனாவால் மன்னாரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் நிகழ்ந்த 4ஆவது மரணம் இதுவாகும். கடந்த ஒரு வாரமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த திருக்கேதீஸ்வரத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரே இவ்வாறு கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றினால் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை. நாட்டை முடக்கும் தீர்மானத்தை மட்டும் எடுக்கவேண்டாம் என அன்றாடம் உழைத்து வாழும் மக்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்த விடயத்தில் சகல தரப்பினரதும் கருத்துக்களை நாங்கள் கருத்தில் எடுக்க வேண்டியுள்ளது என மேற்கண்டவாறு இராணுவ தளபதியும் தேசிய கோவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் ...
கிளிநொச்சி பொதுச்சந்தையில் வெற்றிலைக் கடை உரிமையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் சந்தையில் உள்ள வெற்றிலைக் கடைகள் அனைத்தும் முடக்கப்பட்டிருக்கின்றன. சந்தைக் கட்டடத் தொகுதியில் காணப்பட்ட 32 கடைகளில் 25 வெற்றிலை கடைகளும் 7 தேங்காய் கடைகளும் உள்ள டங்குகின்றன. குறித்த கடை உரிமையாளர் 6 நாட் ...
யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குருநகர்ப் பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்த நிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனயில் குறித்த நபருக்கு தொற்று இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில், இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து சிவகுரு ஆதீன குரு தவத்திரு வேலன் சுவாமிகள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். இதேவேளை முள்ளிவாய்க்காலில் பயங்கரவாதத்தைத் தூண்டாத வகையிலும் கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றி அஞ்சலி நிகழ்வை மேற்கொள்ளலாம் என முல்லைத்தீவு நீதிமன்றம் நேற்றுமுன்தினம் தீர்ப்பு ...
பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டதை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று தமிழர் தாயகத்தில் பரவலாக இடம்பெற்றன. அரச படையினரின் கடுமையான கெடுபிடிகளுக்கு மத்தியில் அஞ்சலி நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கோவிட்-19 தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைய மக்களைத் திரட்டாமல் பல்வேறு இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் ...
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 322 பேருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து புதுக்குடியிருப்பு, முள்ளியவளை பகுதிகள் முடக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு ஆடை தொழிற்சாலையில் நேற்று 926 பேருக்கு நடத்தப்பட்ட கொவிட் – 19 பரிசோதனையில் 322 ...
இன்று மே 18 யாழ்.பல்கலைக்கழத்தினுள் சில மாணவர்கள் நினைவேந்தலில் ஈடுபடலாம் எனப் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருப்பதனால், பல்கலைக் கழகம் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும், பல்கலைக்கழகத்தைச் சுற்றி படையினர் குவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. தீவிர கண்காணிப்பை மீறிச் செயற்படுவோர் மீது சட்ட நடவடிக்கைகள் ...
நாடு முழுவதும் மீண்டும் முழுநேர பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். இதன்படி 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை 11 மணிமுதல் 25ஆம் திகதி செவ்வாய் அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் எனவும்,மீண்டும் அதேநாள் 25 ஆம் திகதி இரவு ...
பாடசாலை ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச் சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். பாடசாலைகளை விரைவில் திறக்க வேண்டுமாயின் பாடசாலைகளுக்குள் போதியளவு சுகாதார வசதிகளை உறுதி செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். மேல் மாகாணத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டு வருவதாகவும், ஏனைய மாகாணங்களிலும் ஆசிரியர்களுக்கு ...