அமெரிக்கா- ஈரான் இடையில் இரண்டு வார போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த போர் நிறுத்தம் எப்போது வேண்டுமென்றாலும் முறிவடையலாம் என்ற நிலையில்தான் இருக்கிறது. இதற்கிடையே இரண்டு நாடுகளுக்கும் இடையில் நேற்று முதல் இன்று அதிகாலை வரை 21 மணி நேரம் நீடித்த போர் நிறுத்த பேச்சுவார்த்தை உடன்படிக்கை எட்டப்படாமல் ...
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு, ஊவா மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவ மாவட்டங்களிலும் கடும் மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று (12) நண்பகல் விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும். பிற்பகல் 1.00 மணிக்கு மேல், ...
எதிர்மறை மனோபாவம்! “கல்யாணத்துக்குப் போய் இருந்தாயே. எப்படி இருந்தது?” என்று கேட்டார் ஒருவர்.“எப்படி இருந்தது. இரசத்திலே உப்புக் குறைவு!” என்றார் அவர். இது ஒரு மனித சுபாவம். negative விடயங்களை பார்ப்பது பேசுவதினாலேதான் மனிதனுக்கு ஆர்வம் அதிகம். இரசத்திலே உப்பு குறைவு என்பது ஒரு குறைதான். ஆனால் சாம்பாரிலே ...
உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் வீரர்கள் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து நியமிக்கப்பட்டுள்ளார். இஃது இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. சமரி அதபத்துவுடன் இணைந்து ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான், இத்தாலியின் வேன் மேட்சன், நியூசிலாந்தின் டேரில் ...
இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் தரம் காரணமாக ஏற்படும் மேலதிக செலவுகளை, மின்சாரக் கட்டணத் திருத்தங்களின் போது மின் நுகர்வோரிடமிருந்து வசூலிக்கக் கூடாது என இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது. மின்சாரக் கட்டணத் திருத்த முன்மொழிவுகளின் போது மின் உற்பத்தி, கடத்துகை மற்றும் விநியோகத்திற்காகச் செலவிடப்படும் நியாயமான செலவுகள் ...
சட்டவிரோதமான முறையில் 7 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய அலங்கார செடிகளை நாட்டுக்குள் கொண்டு வந்த பயணி ஒருவர், விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். வெயாங்கொடை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர் இந்தியாவின் பெங்களூரு ...
இஸ்லாமாபாத்தில் பல மணிநேரப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் இரு தரப்பினராலும் ஒரு உடன்பாட்டிற்கு வர முடியவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் சார்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அமெரிக்கா துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் இதனை தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தையின்போது அமெரிக்கா சமர்ப்பித்த நிபந்தனைகளை ஈரான் ‘ஏற்க விரும்பவில்லை இந்தநிலையில் ஈரானின் இந்த ...
உத்தர பிரதேசத்தில் பாயும் யமுனை ஆற்றில் சென்ற படகு கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். உத்தர பிரதேசத்தில் மதுரா மாவட்டத்தில் பாயும் யமுனை ஆற்றில் பஞ்சாபைச் சேர்ந்த 30 பயணியருடன் படகு ஒன்று நேற்று புறப்பட்டது. விருந்தாவன் கோட்வாலி பகுதியில் சென்றபோது திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த ...
யாழ். காரைநகரை அண்டிய இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின்போதே இவர்கள் பிடிபட்டுள்ளனர். இந்தியாவின் காரைக்கால் பகுதியிலிருந்து மீன்பிடிக்கப் புறப்பட்ட மேற்படி மீனவர்கள், காரைநகர் கடற்பரப்பினுள் அத்துமீறி ...
திருகோணமலை- நாமல்வத்தை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன் உயிரிழந்த நிலையில் மனைவி படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (11) மாலை இடம் பெற்றுள்ளது. மொரவெவ பகுதியில் இருந்து பயணித்த முச்சக்கரவண்டி வேகமாக நாமல்வத்த பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணை ...