இலங்கையில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை படிப்படியாக நிலைபெற்று வருகின்றது. நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது காணப்படும் மழைக்காலநிலை, அடுத்த சில மணித்தியாலங்களுக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (22) அதிகாலை 5.30 மணிக்கு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் தனது சட்டபூர்வ வருமானத்தை மீறி, 75 மில்லியன் ரூபாய்க்கும் அதிக சொத்துக்களை சட்டவிரோதமான முறையில் ஈட்டியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நேற்று (21) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ...
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் 2026 மே 20 ஆம் திகதியிடப்பட்ட கோரிக்கைக்கு இணங்க, இலங்கை கிரிக்கெட்டின் புதிய தெரிவுக் குழுவிற்காக பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவினால் உத்தியோகபூர்வ அங்கீகாரம் கிடைத்துள்ளது. 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் ...
அடுத்த வாரமாகும்போது மத்திய வங்கியின் வட்டி விகிதங்கள் குறைந்தபட்சம் 50 அல்லது 100 அடிப்படைப் புள்ளிகளால் (Basis points), அதாவது 0.5% அல்லது 1% இனால் அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நேற்று (21) பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளார். வட்டி விகிதங்கள் இவ்வாறு அதிகரித்தால், ...
தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் படி, 2026 ஏப்ரல் மாதத்தில் நாட்டின் முதன்மைப் பணவீக்கம் 4.7 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி, 2026 மார்ச் மாதத்தில் இந்த மதிப்பு 2.4 சதவீதமாகப் பதிவாகியிருந்தது. அறிக்கையின்படி, மார்ச் மாதத்தில் 0.7 சதவீதமாகக் காணப்பட்ட உணவுப் பிரிவின் ...
நாட்டில் மூன்றில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. இலங்கையில் பதிவாகும் மரணங்களில் சுமார் 34 சதவீதமானவை உயர் இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் நோய்களாலேயே நிகழ்கின்றன என சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரீனி அலகப்பெரும நேற்று (20) நடைபெற்ற ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 8 தந்தை செல்வாவின் உரைகளைத் தொகுத்த தென்னிந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயர் கலாநிதி எஸ்.ஜெபநேசன் அவர்கள், தந்தை செல்வாவின் 49 ஆவது நினைவு தினமாகிய கடந்த 26.04.2026 அன்று வலம்புரி நாளிதழின் 22 ஆம் பக்கத்தில் தந்தை செல்வாவின் தீர்க்கதரிசன உரைகள் எனக் ...
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்றைய தினம் தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் மேற்கொள்ளப்படவுள்ளது. தமிழக முதலமைச்சராக ஜோசப் பதவியேற்றதன் பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கட்ராமன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். முதலமைச்சர் உள்ளிட்ட ...
இபோலா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்குரிய தடுப்பூசியை தயாரிக்க மேலும் 9 மாதங்கள் தேவைப்படுமென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இதனால் குறித்த காலப்பகுதிக்குள் இபோலா வைரஸ் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடுமென குறித்த ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இபோலா வைரசை கட்டுப்படுத்தும் திறன் கொண்டதென நம்பப்படும் ...
வரதட்சணை கொடுமை காரணமாக யாழில் 19 வயது இளம் குடும்பப் பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். யாழ் – நாவாந்துறை பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தான் இரு வருடங்களாக காதலித்த நபரை நான்கு மாதங்களுக்கு முன்னர் குறித்த பெண் திருமணம் செய்துள்ளார். எனினும் கணவனின் தாயார் பெண்ணை ஏற்றுக்கொள்ளாத நிலையில் ...