2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் தொடக்க ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி, தொடரை நடத்தும் மெக்சிகோ அணி வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ‘ஏ’ பிரிவின் கீழ் இடம்பெற்ற இப்போட்டி, மூன்று உலகக் கோப்பை கால்பந்து தொடர்களுக்குப் பங்களிப்பு வழங்கிய புகழ்பெற்ற எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் நடைபெற்றது. ஒரேயொரு ...
உலகம் முழுவதும் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்வதற்கும், கடுமையான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் காரணமாக அமையும் ‘எல்-நினோ’ நிலை தற்போது தீவிரமடையத் தொடங்கியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்மேற்குப் பருவமழை குறைவடைவதற்கும் இந்த எல்-நினோ நிலைமையே காரணம் என்று அத்திணைக்களத்தின் எதிர்வுகூறல் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெந்திஸ் தெரிவித்துள்ளார். தற்போது ...
தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோனின் மூத்த மகளான பஜ்ரகிதியாபா நரேந்திரா தெபியாவதி இளவரசி காலமானதாக அந்நாட்டு அரண்மனை இன்று (12) அறிவித்துள்ளது. சுமார் 4 ஆண்டுகள் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், உயிரிழக்கும் போது அவருக்கு வயது 47 ஆகும். கடந்த 2022 ஆம் ஆண்டு ...
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று (11) இரவில் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் நோக்கிப் பயணத்தை ஆரம்பித்த விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. மின்னல் தாக்கியதன் காரணமாகவே இந்த விமானம் இவ்வாறு அவசரத் தரையிறக்கத்தை மேற்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. யு.எல். 606 (UL 606) ...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்றைய தினம் (12) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அப்பகுதிகளின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் ...
ஈரான் மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்த இராணுவத் தாக்குதல்களை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் தலைமையும் பிராந்தியத்தின் பல நாடுகளும் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், ...
2025 ஆம் ஆண்டில் குழந்தை தொழிலாளர்கள் முறை தொடர்பாக சுமார் 516 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய குழந்தை பாதுகாப்பு அதிகாரம் தெரிவித்துள்ளது. ஜூன் 12 ஆம் திகதி அனுசரிக்கப்படும் “குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான சர்வதேச தினத்தை” முன்னிட்டு விடுத்துள்ள விசேட அறிக்கை ஒன்றில் அந்த அதிகாரம் இதனைத் ...
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்று (11) பிற்பகல் நடைபெற்றது. கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் பலரின் பங்கேற்புடன் நடைபெற்ற இக்கூட்டத்தில், தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு மற்றும் அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் ...
மூன்று நாட்கள் நடத்தப்பட்ட விசேட டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் போது பரிசோதிக்கப்பட்ட 97,871 வளாகங்களில், 6,268 வளாகங்களில் டெங்கு நுளம்பு குடம்பிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கடந்த 8ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 72 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகளை உள்ளடக்கி முன்னெடுக்கப்பட்டு, ...
ஹம்பாந்தோட்டை, மிரிஜ்ஜவில பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றிற்குள், அதன் உரிமையாளரான வயதான பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டவர் மிரிஜ்ஜவில, 100 அடி வீதி பகுதியில் “லீலா ஸ்டோர்ஸ்” என்ற கடையை நடத்தி வந்த ...