அவசர தேவைக்குரிய மருந்துகளை பொதுமக்கள் பெற்றுக் கொள்வதற்கு வசதியாக இன்று ஏப்ரல் 2ஆம் திகதி நாளை 3ஆம் திகதி மற் றும் 6ஆம் திகதி ஆகிய தினங்களில் அனை த்து மருந்தகங்களையும் திறப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த தினங்களில் அனைத்து மருந்தகங்களையும் திறப்பதற்கு அனுமதியளித் திருப்பதாக ...
யாழில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளதால் ஓய்வூதியர்கள் எவரும் வங்கிக்கு செல்ல வேண்டாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஓய்வூதியர்கள் வங்கிகளுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் யாழில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வைரஸ் தொற்றுக்கு உள்ளாவதற்கு அதிக சந்தர்ப்பங்கள் ...
மதபோதகர் உட்பட யாழில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுவிஸ் போதகருடன் அரியாலை தேவாலயத்தில் நெருங்கிப் பழகியவர்களுக்கே கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மானிப்பாய் கிறிஸ்தவ தேவாலயத்தைச் சேர்ந்த மத போதகருக்கு ...
கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் உயிரிழந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கொரோனா நோயாளி தொடர்பில் யாழ்.மக்கள் அச்சமடையத் தேவையில்லை. இருந்தாலும் அவதானமாக இருக்க வேண்டுமென யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் இ.தேவநேசன் தெரிவித்தார். நீர்கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட இறந்த கொரோனா நோயாளி யாழ்.நகர்ப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து ...
அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் அதிகரிக்கலாம் என வைத்திய பரிசோதனை சபையின் பணிப்பாளர் வைத்தியர் ஜெயருவான் பண்டார இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஆரம்பத்தில் ஒருவர் இருவர் என்ற வகையில் நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். முதலில் இது ஒருவரிடம் ...
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நீர்கொழும்பு வைத்தியசாலையில் உயிரிழந்த குடும்பத் தலைவரை நேரடியாக காலதாமதமின்றி அரச வைத்தியசாலையில் சேர்த்திருந்தால் காப்பாற்றியிருக்க முடியும் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். “அவருக்கு சுவாசக் கோளாறு எனத் தெரிவித்து கடந்த சனிக்கிழமை தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மறுநாளான நேற்று முன்தினமே ...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்ட 8 பேருக்கும் கொரோனா தொற்று இல்லையென யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இராணுவச் சிப்பாய், பொலிஸ் உத்தியோகத்தர், ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய மன்னாரை சேர்ந்த இரு யுவதிகள், பருத்தித்துறை மூதாட்டி உள்ளிட்டவர்கள் கொரோனா சந்தேகத்தில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ...
கொரோனா வைரஸ் (கோவிட் 19) தொற்றால் மேலும் 20 பேர் நேற்று செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 142ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உட்பட) அதிகரித்துள்ளது. அவர்களில் 17 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருவர் உயிரிழந்துள்ளனர். ...
யாழ்.சிறைச்சாலையில் குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 44 கைதிகள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்.மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர்கள் சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் கொரோனா தொற்று அபாயம் காரணமாக சிறைச்சாலைகயில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சிறு குற்றங்களுடன் தொடர்புடையவர்களை பிணையில் விடுதலை செய்ய ஜனாதிபதி எடுத்துள்ள சிறப்பு ...
யாழில் இடம்பெற்ற சுவிஸ் போதகரின் ஆராதனையுடன் தொடர்புபட்ட 800 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேவாலய ஆரதனையொன்றில் சுவிஸ் போதகர் மூலம் கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தார். குறித்த ஆராதனையில் போதகர் உட்பட 9 பேரும் கலந்துகொண்டிருந்தமையின் பிரகாரமே தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். மேற்படி 9 பேருமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ...