கொரோனா நோயாளி பயணித்த வாடகை வாகனத்துக்கு பிரதேசவாசிகள் இணைந்து தீ வைத்துள்ளனர். கண்டி அக்குரணை பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி விமான நிலையத்தில் இருந்து தனது வீட்டுக்கு வந்த வாகனத்தை கம்பளை பொலிஸ் நிலையத்தின் புலனாய்வு பிரிவினர், கம்பளை சிங்கப்பிட்டி பகுதியில் கண்டுபிடித்துள்ளனர். இதன் பின்னர் இந்த ...
கொரோனா வைரஸால் நயினாதீவைச் சேர்ந்த ஒருவர் பிரான்ஸில் உயிரிழந்துள்ளார். இதல் பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க்கைச் சேர்ந்த குகதாசன் விஜயானந் (வயது-47) என்பவரே கொரோனா வைரஸால் நேற்று முன்தினம் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
நேத்ரா வீ.V அலைவரிசை ஊடாக தரம் 6-11 வரையான மாணவர்களுக்கான பாடங்கள் தமிழ் மொழிமூலம் நடத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் யாழ்ப்பாணம் வலயக்கல்வி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கல்வி அமைச்சின் தீர்மானத்துக்கமைவாக நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 20ஆம் திகதி தொடக்கம் தரம் 6-11 ...
வட இலங்கைச் சங்கீத சபையினால் நடத்தப்படுகின்ற சகல பரீட்சைகள் மற்றும் கருத்தரங்குள் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது, வட இலங்கைச் சங்கீத சபையினால் 2020 மே, யூன் மாதங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த சகல தரங்களுக்குமான சகல பரீட்சைகளும் தரம் 5 ...
சுவிஸ் மத போதகரால் யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. யாழில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் ஏனையவர்களுக்கு வைரஸ் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே யாழ்.மக்கள் அனைவரும் அவதானமாக இருக்குமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழில் ஊரடங்கு ...
ஏப்ரல் மாதத்தில் தமது ஓய்வூதிய சம்பளத்தை பெற்றுக் கொள்ளும் ஓய்வூதிய சம்பள உரிமையாளர்களின் ஓய்வூதிய சம்பளத்தை அவர்களது வீட்டுக்கே கொண்டு சென்று ஒப் படைக்கும் வேலைத் திட்டம் தற்பொழுது தபால் திணைக்களத்தின் பணியாளர்களினால் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். இதற்கமைவாக, ஓய்வூதிய சம்பளத்துக்கு உரித்தானவர்கள் அரசாங்கத்தினால் ...
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஆட்கள் பற்றாக்குறை எழுந்துள்ளது என்றால் பட்டதாரிப் பயிலுநர்களை பயன்படுத்துவதற்கு பதிலாக சம்பளத்துடன் வீட்டில் இருக்கும் அரச ஊழியர்களை பயன்படுத்துங்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய அரசுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் பட்டதாரிப்பயிலுநர்களை பணிக்கு அமர்த்துவது ...
கொரோனா வைரஸ் தொற்றுக் குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 58 வயதுடைய ஒருவர் நேற்று வியாழக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். இதன்மூலம் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண் ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தவரே இவ்வாறு உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அச்சுவேலியைப் பிறப்பிட மாகவும் பிரான்ஸில் பொண்டியை வசிப்பிடவுமாகவும் கொண்ட நாகமுத்து உதயபாஸ்கரன் என்பவர் கொரோனா வைரஸால் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை உயிரிழந்துள்ளார். இதேவேளை, இவரது மகன் ஒருவரும் கொரோனா தொற்றிற்கு இலக்காகி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் நேற்று சிறப்புக் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடல் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மக்கள் வாழ்க்கையை சுமுகமாக பேணுவதற்கு அத்தியாவசிய சேவைகள், உணவுப் பொருள்கள், மருந்துப் ...