கிழக்கு மாகாண நில உரிமை மற்றும் மனித உரிமை விவகாரங்கள் நேற்று (06), இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மற்றும் கனேடிய உயர்ஸ்தானிகரை, கிழக்கு மாகாண நில மீட்பு வலையமைப்பினர் திருகோணமலை Trinco Blu Hotel இல் சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பில், கிழக்கு மாகாண நில மீட்பு வலையமைப்புடன் இணைந்து ...
தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள சி. ஜோசப் விஜய் என்கிற ‘தளபதி விஜய்’க்கு, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு நேற்று (06) அனுப்பி வைத்துள்ள வாழ்த்துக் கடிதத்தில், நடந்து முடிந்த தேர்தலில் அவர் ஒரு சிறப்பான ...
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.எல். அல்கேகருடனான சந்திப்பின்போது, தவெக தலைவர் விஜய்யிடம் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் கோரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக சட்டப்பேரவையில் 108 இடங்களில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் என்னும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாத நிலையில் ...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவுக்குச் சொந்தமான 40 கோடி ரூபாய் பெறுமதியான வீடு என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது எனத் தெரிவித்து, அது தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி ...
இன்று (07) நள்ளிரவு முதல் ரைஸ், பிரியாணி மற்றும் நாசிகுரென் ஆகிய உணவு வகைகளின் விலைகளை 25 ரூபாவினால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்தி நடத்தப்படும் சிற்றுண்டிச்சாலைகளில் சாதாரண தேநீர் மற்றும் பால் தேநீரின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் ...
குருநாகல் மாநகர சபையில் நிலவும் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திர தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை அவர் நேற்று (06) குருநாகல் மேயர் சட்டத்தரணி ஆனந்த சஹபந்துவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார். மாநகர ...
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி நான்கு நாட்களாகியும், தமிழக வெற்றி கழகத் (தவெக) தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும் ஆட்சி அமைக்கத் தேவையான 118 எட்டுவதில் ஏற்பட்டுள்ள சவால்களே இந்தத் தாமதத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. 234 ...
செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இன்றுவரை 256 மனித என்புகூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். செம்மணி சித்துப்பாத்தி மனிதபுதைகுழியின் 3ஆம் கட்ட அகழ்வுப் பணி கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிக்கபட்டது. இரு நாள்கள் துப்புரவுப் பணிகள் இடம்பெற்ற பின்னர் அகழ்வுப் பணிகள் ...
ஜனாதிபதி தலைமையிலான இந்த அரசாங்கம் எப்படி பொய்களை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்ததோ அதே போன்றுதான் இந்தியாவில் தமிழ்நாட்டில் விஜய்யும் பொய்களை அள்ளி வீசி தற்போது ஆட்சிக்கு வந்துள்ளார். அவருக்கும் ஆட்சியை கொண்டு செல்ல முடியுமாக இருக்குமோ என்று தெரியவில்லை. அந்தளவுக்கு பொய்யான வாக்குறுதிகளை வாரி இறைத்துள்ளார் என ...
களுத்துறை வங்கியொன்றில் 15 கோடி ரூபா நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் வங்கியின் இரு பெண் பிரதான அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் களுத்துறை, கொஹோலான சனச வங்கியின் மேலாளர் மற்றும் அதன் செயலாளர் ஆவர். வங்கியின் கணக்காய்வு அறிக்கையின்படி, வங்கியிலிருந்த மொத்த வைப்புத்தொகை 170 ...