நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த செய்ய வேண்டிய சகல நடவடிக்கைகளையும் சுகாதாரத் துறையினர் முன்னெடுத்தாலும் கூட அடுத்துவரும் நாட்கள் மிகவும் கடினமானதாக இருக்கின்ற காரணத்தினால் புத்தாண்டு வரையிலும் இலங்கையின் நிலைமையை சரியாக அறிவிக்க முடியாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கொரோனா ...
சுவிஸ் மத போதகரினால் யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதையடுத்து யாழ்ப்பாணம் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும்போது ...
தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்தில் தொண்டாற்றிய குடும்பத் தலைவர் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று மதியம் இடம் பெற்றுள்ளது. தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய தொண்டர்கள் சிலர் இணைந்து ஆலய மண்டபத்தை கொம்பிறசர் ஊடாக தண்ணீர் பாய்ச்சி கழுவிக் கொண்டிருந்தபோது, அதிலிருந்து மின் ஒழுக்கு ஏற்பட்டுள்ளது. ...
தனிமைப்படுத்தல் நிலையங் களில் 14 நாட்கள் கண்காணிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் வீடுகளில் மீளவும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலை கடைப் பிடிக்குமாறு இராணுவத் தளபதியும் கொரோனா தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான லெப். ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். தென் கொரியாவிலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் ...
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பி 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நிலையத்தல் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வீடு திரும்பிய வருக்கு 10 நாட்களின் பின் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 10ஆம் திகதி தென்கொரியாவிலிருந்து நாடு திரும்பிய அவர், கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் 14 நாட்கள் தங்கவைக்கப்பட்டு கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ...
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும், சீவல் தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பனை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. இந்த அனுமதி தொடர்பில் துறைசார் அமைச்சருடன் கலந்துரையாடி தேவையான ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளதாக இலங்கை பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிருஷாந்த பத்திராஜ குறிப்பிட்டார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 1500 ...
கொரோனா வைரஸால் பிரித்தானியாவில் மீசாலையைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிருஷ்ணசாமி சியாமளன் (வயது-42) என்ப வரே நேற்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவருக்கு 2 வயது மற்றும் 6 மாதத்தில் மகன்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கொரோனா வைரஸ் (கோவிட் 19) தொற்றுக்குள்ளான நிலையில் வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் பதிவான 5ஆவது உயிரிழப்பு இதுவாகும். கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் வேறு எந்தவொரு நோயாலும் பாதிக்கப்படாதவர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ...
பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி பயணித்த கார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். மொரட்டுவ, எகொடஉயன பகுதியில் வைத்தே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற் கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸார் நிறுத்துமாறு உத்தரவிட்டதையும் மீறி பயணித்த நிலையிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த காரில் 4 பேர் ...
தாம் யாருடன் எல்லாம் பழகினோம் என்பதை தயவுசெய்து ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். விஷேடமாக மேல் மாகாணத்தின் கொழும்பு களுத்துறை, கம்பஹா மாவட்டங்கள், புத்தளம், கண்டி, யாழ். மாவட்டங்களில் உள்ளவர்கள் இக்காலப்பகுதியில் பழகியவர்கள் தொடர்பில் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதேனும் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட ...