சுடுநீர் மூலமாகவேதான் கொரோனாவிலிருந்து மீண்டதாக கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்ததாக நோயாளி தகவல் வெளியிட்டுள்ளார். இலங்கையில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்த நோயாளிதான் காப்பாற்றப்பட்ட விதம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற போது சுடுநீர் மாத்திரமே அதிகமாக வழங்கப்பட்டதென கொரோனாவில் ...
“கொரோனா உங்களை அணுகாது” என்ற தலைப்பில் யாழிலிருந்து வெளியாகும் பத்திரிகை யொன்று விளம்பரம் ஒன்றை கடந்த 15ஆம் திகதி பிரசுரித்திருந்தது. இதனைக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சுட்டிக்காட்டிய பிரதமர் மகிந்த இப்படி பொறுப்பற்ற விதத்தில் விளம்பரம் பிரசுரித்ததற்கு தனது கண்டனத்தை வெளியிட்டார். கட்சித் தலைவர்கள் கூட்டமானது நேற்று முன்தினம் ...
சுவிஸ் மத போதகரால் யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. யாழில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் ஏனையவர்களுக்கு வைரஸ் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே யாழ்.மக்கள் அனைவரும் அவதானமாக இருக்குமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழில் ஊரடங்கு ...
ஏப்ரல் மாதத்தில் தமது ஓய்வூதிய சம்பளத்தை பெற்றுக் கொள்ளும் ஓய்வூதிய சம்பள உரிமையாளர்களின் ஓய்வூதிய சம்பளத்தை அவர்களது வீட்டுக்கே கொண்டு சென்று ஒப் படைக்கும் வேலைத் திட்டம் தற்பொழுது தபால் திணைக்களத்தின் பணியாளர்களினால் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். இதற்கமைவாக, ஓய்வூதிய சம்பளத்துக்கு உரித்தானவர்கள் அரசாங்கத்தினால் ...
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஆட்கள் பற்றாக்குறை எழுந்துள்ளது என்றால் பட்டதாரிப் பயிலுநர்களை பயன்படுத்துவதற்கு பதிலாக சம்பளத்துடன் வீட்டில் இருக்கும் அரச ஊழியர்களை பயன்படுத்துங்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய அரசுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் பட்டதாரிப்பயிலுநர்களை பணிக்கு அமர்த்துவது ...
கொரோனா வைரஸ் தொற்றுக் குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 58 வயதுடைய ஒருவர் நேற்று வியாழக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். இதன்மூலம் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண் ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தவரே இவ்வாறு உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளதால் ஓய்வூதியர்கள் எவரும் வங்கிக்கு செல்ல வேண்டாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஓய்வூதியர்கள் வங்கிகளுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் யாழில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வைரஸ் தொற்றுக்கு உள்ளாவதற்கு அதிக சந்தர்ப்பங்கள் ...
மதபோதகர் உட்பட யாழில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுவிஸ் போதகருடன் அரியாலை தேவாலயத்தில் நெருங்கிப் பழகியவர்களுக்கே கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மானிப்பாய் கிறிஸ்தவ தேவாலயத்தைச் சேர்ந்த மத போதகருக்கு ...
கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் உயிரிழந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கொரோனா நோயாளி தொடர்பில் யாழ்.மக்கள் அச்சமடையத் தேவையில்லை. இருந்தாலும் அவதானமாக இருக்க வேண்டுமென யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் இ.தேவநேசன் தெரிவித்தார். நீர்கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட இறந்த கொரோனா நோயாளி யாழ்.நகர்ப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து ...
அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் அதிகரிக்கலாம் என வைத்திய பரிசோதனை சபையின் பணிப்பாளர் வைத்தியர் ஜெயருவான் பண்டார இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஆரம்பத்தில் ஒருவர் இருவர் என்ற வகையில் நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். முதலில் இது ஒருவரிடம் ...