யாழ்.சிறைச்சாலையில் குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 44 கைதிகள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்.மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர்கள் சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் கொரோனா தொற்று அபாயம் காரணமாக சிறைச்சாலைகயில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சிறு குற்றங்களுடன் தொடர்புடையவர்களை பிணையில் விடுதலை செய்ய ஜனாதிபதி எடுத்துள்ள சிறப்பு ...
யாழில் இடம்பெற்ற சுவிஸ் போதகரின் ஆராதனையுடன் தொடர்புபட்ட 800 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேவாலய ஆரதனையொன்றில் சுவிஸ் போதகர் மூலம் கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தார். குறித்த ஆராதனையில் போதகர் உட்பட 9 பேரும் கலந்துகொண்டிருந்தமையின் பிரகாரமே தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். மேற்படி 9 பேருமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ...
கொரோனா தொற்றினால் உயிரிழந்த இரண்டாவது இலங்கையரின் உடலை தகனம் செய்யும் நடவடிக்கை நேற்று நள்ளிரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீர்கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான பொது கல்லறையில் அவரது உடல் பாதுகாப்பாக எரியூட்டப்பட்டுள்ளது. இதன்போது நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் பிரதானிகள், நீர் கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் பிரதேச ...
யாழ்ப்பாணம் நாவாந்துறை காபிஅபூபக்கர் வீதியில் 3 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் நீர்கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் நேற்று முன்தினம் உயிரிழந்த நிலையில், குறித்த நபர் நாவாந்துறை பகுதியில் மூன்று குடும்பங்களின் வீடுகளில் தங்கிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ...
களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொரட்டுவ பகுதியை சேர்ந்த 60 வயதான ஒருவரே தொற்றிற்கு உள்ளாகியுள்ளார். வைத்தியசாலையின் 5வது விடுதியில் அவர் சிகிச்சை பெற்று வந்திருந்தார். அவருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, வைத்தியசாலையில் மருத்துவ உத்தியோகத்தர்களில் ஒரு ...
கொரோனாவல் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக் கான நிவாரணங்கள் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள நிவாரணங்கள் மற்றும் அவற்றை பெற்றுக் கொள்வதற்கு தகைமையுள்ளவர்கள் கீழ்வருமாறு, 1.முதியோருக்கான கொடுப்பனவு பெறும் 416764 பேருக்கும் முதியவர்களாக இனம் காணப்பட்ட, ஆவணப்படுத்தப்பட்டுள்ள 142 345 பேருக்கும் ரூபாய் 5000 கொடுப்பனவு ...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, கொழும்பு ஐனுர் வைத்திய சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 64 வயது டையவர் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்த இரண்டாவது ...
கொரோனா வைரஸ் பரவும் அபாயம் காரணமாக யாழ்ப்பாணம் தொடர்ந்து முடக்கப்படுகின்றது. தற்போது அமுலில் இருக்கும் ஊரடங் குச் சட்டம் மறு அறிவித்தல்வரை தொடர்ந்து அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி ...
தற்பொழுது நாட்டின் பல்வேறு இடங்களில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நேரத்தில் யாழ்ப் பாணத்தில் ஊரடங்கு சட்டம் மிகவும் இறுக்கமான முறையில் நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் இலங்கை இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணி களமிறக் கப்பட்டு சோதனை ...
கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் முதலாவதாக உயிரிழந்த நபரின் உடல் நேற்று அரச செலவில் மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று முன்தினம் மாரவில பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய தர்மசிறி ஜனானந்த என்பவர் உயிரிழந்திருந்தார். குறித்த நபரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படமாட்டாது ...