பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் காலம் நீடிக்கப்படலாம் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைள் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள போதும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய மேலும் தாமதமடையலாம் என அமைச்சின் செயலாளர் என்.எச்.சித்ரானந்த தெரிவித்துள்ளார். ...
அத்தியாவசிய உணவு வழங்கள், அரிசி உற்பத்தி, களஞ்சியப்படுத்தல், விநியோகித்தல் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அத்தியா வசியமானது என்பதால் அனைத்து நெல் ஆலை உரிமையாளர்களினதும் சேவைகள் கோவிட் – 19 நோய்த்தடுப்பு அத்தியாவசிய சேவையாக மீண்டும் அறிவிக்கும் வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள அனைத்து அரிசி ஆலை களினதும் உரிமையாளர்கள் தாம் ...
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையிலும் நாட்டினை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கும் இலங்கை சமூக வைத்திய நிபுணர்கள் சங்கம் யோசனைகளை முன்வைத்துள்ளது. அபாய வலயங்கள் தொடர்பில் ஆய்வு செய்து, ஏனைய பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டத்தை இலகு படுத்துவது ஏற்புடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ நிலையங்கள், மருந்தகங்கள், பல்பொருள் ...
யாழ்ப்பாணம் உட்பட இடர்வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்களில் கொரோனா அறிகுறிகள் எதுவுமின்றி மக்களோடு மக்களாக உள்ள கொரோனா தொற்றாளர்களைக் கண்டுபிடிக்க, பொதுமக்களிடையே பரிசோதனைகளை முன்னெடுக்க சிறப்புச் செயற்றிட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் தொற்று நோயியல் நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கொரோனா ...
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மருந்தகங்களையும் இன்று (வெள்ளிக் கிழமை) திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார். இன்று காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை மருந்தகங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினமும் நாடளாவிய ரீதியில் ...
“கொரோனா வைரஸ் தொற்றுடையவர்களுடன் நெருங்கிப்பழகிய குழுக்கள் தனிமைப் படுத்தப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தப்படும் முறைமை தற்போது கடைப்பிடிக்கப் படுகிறது. எனினும் அதற்கப்பாலும் இரு கட்டங்கள் முன்னோக்கி தொடர்புகளை கொண்டி ருந்தவர்களை இனம் கண்டு பரிசோதிக்க வேண்டும்” இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்வுக்கு மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் நாட்டினுள் ...
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, தேவிபுரம் பகுதியில் தனியார் பால் கொள்வனவு நிலையம் ஒன்றில் பணிபுரிந்த இளைஞன் ஒருவர் மதில் வீழ்ந்து, அதற்குள் அகப்பட்டு உயிரிழந்துள்ளார். ஒட்டுசுட்டான் பகுதியினை சேர்ந்த 23 வயதுடைய சௌந்தராஜன் சயந்தன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த இளைஞன் நேற்று முன்தினம் ...
மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, பரப்பாங்கண்டன் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மதியம் 2.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் இரண்டு பெண் சகோதரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மன்னாரில் இருந்து சென்ற மோட்டார் சைக்கிளும், முருங்கன் பிரதான வீதியூடாக மன் னார் நோக்கி வந்த பிக்கப் ரக ...
யாழில் புத்தாண்டு வரை ஊரடங்கு தொடர்ந்து அமுல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர்வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது ...
யாழ்ப்பாணம் திருநெல்வேலியிலுள்ள வர்த்தக நிலையமொன்றிற்குள் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு, உடையார்கட்டை சேர்ந்த சுதாகரன் சுபீகன் (வயது-17) என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இறப்பு எப்படி நிகழ்ந்தது என்பது தொடர்பான தகவல் வெளியாகாததால் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.