யாழ்ப்பாணம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் நாளை 20ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஊரடங்கு தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு இரவு 8 மணிக்கு அமுலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் நோக்குடன் ஊரடங்குச் சட்டத்தை ...
நாடு வழமை நிலைமைக்கு திரும்பிய ஐந்து வாரங்களின் பின்னரே பொதுத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் மகிந்த தேசப் பிரிய தெரிவித்துள்ளார். மேலும் பொதுத் தேர்தலுக்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் சுட்டிக் காட்டியுள்ளார். தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் ...
தற்போதையை சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டத்தினை அகற்றுவது என்பது சாத்தியமற்ற விடயம் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண யாழ்.பலாலியில் வைத்து தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் வருகை தந்த பாதுகாப்புச் செயலாளர், யாழ்ப்பாணம் பலாலி விமானப்படைத்தலைமையகத்தில் பொலிஸ், இராணுவம், விசேட அதிரடிப்படை, கடற்படை மற்றும் விமானப் ...
கொரோனா இடர் வலயத்தில் உள்ளடக்கப்படாத பகுதிகளில், எதிர்வரும் 20ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம், பகலில் ஊரடங்குச் சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. தினமும் காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டத்தை நீக்கி மீண்டும் இரவு 8 மணிக்கு அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் கொரோனா இடர் வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள ...
கோவிட் – 19 தொற்று நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அரச சேவைகள் சீராக ஆரம்பிக்கப்படும் வரை காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடிக் காலத்தை நீடிக்குமாறு அமைச்சர் மகிந்த அமரவீர, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளார். மார்ச் 10ஆம் திகதி முதல் சாரதி அனுமதிப் பத்திரம் காலாவதியாகும் சாரதிகள், அதனை ...
அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் நடைமுறை இரண்டு வாரங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு அறிவித் துள்ளது. ஏப்ரல் 20ஆம் திகதி க்குப் பின்னர் இரண்டு வாரங்களுக்கு இந்தக் கட்டுப்பாடு நடை முறைப்படுத்தப்படும் என்று போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். இதேவேளை, பொதுப் போக்குவரத்தைத் ...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடாக மதுபான சாலைகளில் இருப்பு கணிப்பீடு செய்யப்பட்டு முத்திரையிடப்படுவதாக (சீல்) மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்படும் மாவட்டங்களில் மதுபானசாலை களைத் திறக்க அனுமதியில்லை என்று அறிவுறுத்தியுள்ளது. நாட்டில் ...
தேர்தலை நடத்தும் சூழல் இப்போது இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா வைரஸிலிருந்து நாடு விடுபடவில்லை. நாளுக்குநாள் நிலைமை மோசமடைந்து கொண்டு செல்கிறது. நாட்டின் இயல்பு வாழ்வு மோசமடைந்துள்ளது. எனினும் தேர்தலை மே மாத இறுதிக்குள் ...
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் குறைந்துள்ளது என்பதை கருத்தில் கொண்டு தற்போது நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக் கக்கூடாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமந்த ...
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த இலங்கை மக்களின் பெரும்பாலானவர்கள் மிகப் பெரியளவில் ஒத்துழைப்புகளை வழங்கி வருவதாக கொரோனா தடுப்பு செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். வேறு நாடுகளுடன் ஒப்பிடும்போது, இலங்கை மக்கள் கொரோனா தடுப்பு வேலைத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்புகளையும் வழங்கி ...