கொரோனா தொற்று அபாயம் இன்னும் முழுமையாக நீங்கி விடவில்லை. எனவே வைரஸ் பரவுவதற்கு மீண்டும் இடமளிக்காத வகையில் அனைத்து சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றி பொறுப்புடனும் பொறுமையாகவும் செயற்படுமாறு அரசு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் தொழிலுக்காக சென்று வருவதை தவிர வேறு சந்தர்ப்பங்களில் வீடுகளில் இருந்து ...
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை படிப்படியாக தளர்த்து வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருந்தும் இக் காலப் பகுதியில் நமது சேவை நிலையங்களிற்கு சமுகமளித்தல் மற்றும் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய காரணங்களுக்காக வெளியில் நடமாடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ...
யாழ்ப்பாணம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் நாளை 20ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஊரடங்கு தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு இரவு 8 மணிக்கு அமுலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் நோக்குடன் ஊரடங்குச் சட்டத்தை ...
நாடு வழமை நிலைமைக்கு திரும்பிய ஐந்து வாரங்களின் பின்னரே பொதுத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் மகிந்த தேசப் பிரிய தெரிவித்துள்ளார். மேலும் பொதுத் தேர்தலுக்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் சுட்டிக் காட்டியுள்ளார். தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் ...
சாவகச்சேரி பொலிஸாரால் நேற்று முன்தினம் வியாழக்கிழமை 21 பேர் கைது செய்யப்பட்டனர். கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தேவையின்றி வீதிகளில் சுற்றித் திரிந்தேரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். சாவகச்சேரி பகுதியில் ஏ-9 வீதியோடு இணையும்கிளை வீதிகளில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டு ...
வவுனியாவில் விசேட அதிரடிப் படையினரால் சிறுவர் மற்றும் முதியோர் இல்லங்களில் தொற்று நீக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. விசேட அதிரடிப் படையினரும் வவுனியா நகர சபையினரும் இணைந்து நேற்றுக் காலை இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர். கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தி தொற்றைத் தடுக்கும் ...
சவுதி அரேபிய சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளவரசி பஸ்மா பின்ட் சவுட் அல் சவுட் தன்னை விடுதலை செய்யுமாறு உருக்கமான வேண்டுகோளை விடுத்தார். இளவரசியின் உத்தியோ கபூர்வ டுவிட்டர் மூலம் இந்த வேண்டுகோள் வெளியானது. என்னை சவுதி அரேபியாவின் அல்ஹெயர் சிறையில் தன்னிச்சையாக தடுத்து வைத் துள்ளனர். எனது ...
தற்போதையை சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டத்தினை அகற்றுவது என்பது சாத்தியமற்ற விடயம் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண யாழ்.பலாலியில் வைத்து தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் வருகை தந்த பாதுகாப்புச் செயலாளர், யாழ்ப்பாணம் பலாலி விமானப்படைத்தலைமையகத்தில் பொலிஸ், இராணுவம், விசேட அதிரடிப்படை, கடற்படை மற்றும் விமானப் ...
கொரோனா இடர் வலயத்தில் உள்ளடக்கப்படாத பகுதிகளில், எதிர்வரும் 20ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம், பகலில் ஊரடங்குச் சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. தினமும் காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டத்தை நீக்கி மீண்டும் இரவு 8 மணிக்கு அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் கொரோனா இடர் வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள ...
கோவிட் – 19 தொற்று நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அரச சேவைகள் சீராக ஆரம்பிக்கப்படும் வரை காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடிக் காலத்தை நீடிக்குமாறு அமைச்சர் மகிந்த அமரவீர, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளார். மார்ச் 10ஆம் திகதி முதல் சாரதி அனுமதிப் பத்திரம் காலாவதியாகும் சாரதிகள், அதனை ...