ஆசிய நாடு ஒன்றிலிருந்து சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 6.6 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை ஓமான் அரச பொலிஸார் மீட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தொகையை ஓமானில் உள்ள வங்கி ஒன்றின் ஊடாக அந்நாட்டு நாணயத்திற்கு மாற்ற முயன்றபோது, ஓமான் அரச பொலிஸார் அதனைத் ...
இலங்கைக்கு தென்மேற்கு திசையில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று முற்பகல் 9.30 மணிக்கு வௌியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு நாளை (15) முற்பகல் 08.30 மணி வரை செல்லுபடியாகும் ...
தோட்ட மக்களை மீள்குடியேற்றுவதற்காக நிரந்தர வீடுகளின் நிர்மாணப் பணிகள் நிறைவடையும் வரை அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தில் மீள்குடியேற்றத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி தலைமையில் விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் ...
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷாணி அபேசேகரவை, பிரதி பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தரம் உயர்த்துமாறு நிர்வாக மேன்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான தீர்மானம் நேற்று (13) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவி உயர்வானது 2026 ஒகஸ்ட் 25 ...
இலங்கையில் ஒவ்வோர் ஆண்டும் நிகழும் மரணங்களில் சுமார் 6 சதவீதமானவை ஆஸ்துமா நோயினால் ஏற்படுவதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர். சரியான சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதன் மூலம் இந்த நோயைக் குணப்படுத்த முடியும் என இலங்கை சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் ...
கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ என அழைக்கப்படும் ஒஸ்மண்ட் குணசேகர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிப்பீட்டர் ரக துப்பாக்கி ஒன்று, இரண்டு மெகசின்கள் மற்றும் 10 தோட்டாக்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சந்தேகநபர் ...
நாடளாவிய ரீதியில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற கோர விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம் (13) அஹங்கம, திருக்கோவில், வெலிவேரிய மற்றும் பிடிகல ஆகிய இடங்களில் இவ்விபத்துக்கள் பதிவாகியுள்ளன. நேற்று அதிகாலை அஹங்கம – இமதுவ வீதியில் கடுகஹவத்தை சந்திக்கு அருகில், மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ...
இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் நீடிக்கிறது. இது அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் இலங்கையை விட்டு வெளியேறி படிப்படியாக பலவீனமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை ...
“ஊழிற் பெரு பலியாவுள” என்பார் வள்ளுவர். இந்தப் பிரபஞ்சத்தின்கண் உள்ள அனைத்து ஜீவராசிகளும் ஊழ்வினையின் பாற்பட்டவை. இங்கு ஊழ்வினை என்பது நல்வினை – தீவினை ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாகும். இருந்தும் நடைமுறை உலகில் ஊழ்வினை என்றால் அது தீவினைப் பயன் எனக்கருதப்படுகின்றது. உண்மையில் ஓர் உயிரினம் மகிழ்வாக இருப்பதற்கும் ...
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஊத்துச்சேனை வயல் பகுதிக்கு சென்ற விவசாயி ஒருவர் கால்வாயில் உயிரிழந்த நிலையில் நேற்று (12) செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாகனேரி குளத்துமடுவைச் சேர்ந்த 46 வயதுடையவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த விவசாயி மழை பெய்து வரும் நிலையில் வயலுக்கு சென்றவர் ...