மெய்யியல், வரலாறு, சைவ சித்தாந்தம் என்பவற்றில் புலமைமிக்க பேராசான் ஆ.சபாரட்ணம் அவர்கள் நேற்று முன்தினம் காலமானார் என்ற செய்தி தமிழ் அன்னையை துயரமடையச்செய்துள்ளது. சபாரட்ணம் மாஸ்ரர் மிகப் பெரும் அறிஞர். பண்பாட்டு செழுமையின் பற்றாளர். எவர் மீதும் அன்பு காட்டுகின்ற கனவான். அவரின் அறிவாற்றல் பலரையும் அவர் பால் ...
சமூக சேவைகள் திணைக்களத்தால் 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சுய அபி மான திட்ட ஆய்வில், யாழ்ப்பாணம் கோண்டாவிலில் அமைந்துள்ள சிவபூமி மனவிருத்தி பாடசாலை அகில இலங்கையில் முதலிடத்தைப் பெற்றுள்ளமை நமக்கெல்லாம் மன நிறைவையும் பெருமையையும் தருவதாகும். செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட சிவபூமி அறக்கட்டளை அமைப்பு ...
எதிர்வரும் 4ஆம் திகதி திங் கட்கிழமை அலரி மாளிகையில் நடக்கவிருக்கும் கலந்துரையாடலுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) நிராகரித்துள்ளது. ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தமது நிலைப் பாட்டை விளக்கி நேற்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அதில், ஜே.வி.பியின் எம்.பிக்கள் கூட்டத்தில் கலந்து ...
நீர்வேலியில் ஊரடங்கு அமுலிலிருந்த வேளையில் முகமூடி அணிந்து வாள்களுடன் சென்ற நான்கு பேர் கொண்ட கும்பல் வீட்டிலிருந்தவர்களைக் கடுமையாக அச்சுறுத்தியும் தாக்கியும் மூன்று வீடுகளில் கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளது. குறித்த கொள்ளைச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு நடந்துள்ளது. வீடொன்றில் மூன்று இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணமும் இன்னொரு ...
பொலிஸ் அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரங்கள் சாரதிகள் மற்றும் வாகனங்களில் பயணம் செய்வோர் முகக்கவசங்கள் அணிந்திருந்தால் மட்டுமே செல்லுபடியாகும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று இரவு வெளியிட்ட ஊடக அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ...
பொலிஸாரின் மூர்க்கத்தனமான தாக்குதலில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் படுகாய மடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளிக் கிழமை குடத்தனை, மாளிகைத்திடல் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குடத்தனை மாளிகைத்திடல் பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டுக்கு நேற்று முன்தினம் வியாழக்கிழமை சென்ற பருத்தித்துறை பொலிஸார் ...
சர்வதேச தினங்கள் என்ற கட்டமைப்புகள் எழுகை பெறுவதற்குச் சாயலாக இருந்தவை சமய நிகழ்வுகளும் தினங்களுமாகும். உலகில் உள்ள அனைத்துச் சமயங்களும் வருடம் முழுமையிலும் தமக்கான தினங் களைப் பிரகடனப்படுத்தி உள்ளன. சுருங்கக் கூறின் சைவ சமயத்தில் தைப்பொங்கல் சூரியனுக்கு நன்றி கூறுவதற்கானது. நாயன்மார்களின் குருபூசை குருவைப் போற்றுவது. ஆடி ...
உழைக்கும் மக்களுடன் சேர்ந்து கடந்த காலத்தின் அனைத்து கஷ்டமான சந்தர்ப்பங்களையும் வெற்றி கொண்ட நாம் கோவிட்-19ஐயும் வெற்றிகொள்வோம் என்பது உறுதி என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எமது அரசாங்கம் எத்தகைய கஷ்டமான நிலைமையிலும் கூட நாட்டின் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க் கையை சீர்குலைத்த தில்லை. அத்தகைய நிலைமைக்கு ...
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்திய மூர்த்திதெரிவித்துள்ளார். முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த ஐஎலவைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி பெண் ஏப்ரல் 11ஆம் திகதி முழங்காவிலில் தனிமைப் படுத்தல் ...
எரிபொருட்களை இறக்குமதி செய்வதனை இலங்கை அரசாங்கம் இடைநிறுத்திக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக தற்பொழுது கையிருப் பில் உள்ள எரிபொருட்கள் பயன்படுத்தப்படு வதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாத காலத்திற்கு எரிபொருட்கள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன களஞ்சிய நிறுவனத்தின் தலைவர் ...