தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் பரவுவதைப் பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக இல்லாத அளவிற்குப் பாரியளவில் குறைத்து, அதனைத் தொடர்ச்சியாகப் பேணி வந்தமைக்காக உலக சுகாதார அமைப்பு இலங்கைக்கு விசேட பாராட்டுச் சான்றிதழை வழங்கியுள்ளது. இந்த பாராட்டுச் சான்றிதழ், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்று வரும் 79 ஆவது உலக ...
2026 சிறுபோகத்திற்குத் தேவையான 15,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தைக் விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் விவசாய சேவைக்குழுக்கள் மூலம் கொள்முதல் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2026 சிறுபோகத்தில் 550,000 ஹெக்டேயர் நெல் நிலங்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் என ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்டிருந்த போதிலும், தற்போதைய சூழ்நிலையின்படி அது 450,000 ...
ஆபத்தான ஹண்டா வைரஸ் மற்றும் இபோலா வைரஸ் பரவலானது, ‘அபாயகரமான மற்றும் பிளவுகளை ஏற்படுத்தும் காலப்பகுதியில்’ ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடிகள் என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் ஆரம்பமான உலக சுகாதார அமைப்பின் வருடாந்த தீர்மானம் எடுக்கும் பொதுச் சபை ...
024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியுள்ளதாக கல்விப் பிரதி அமைச்சர் நலின் ஹேவகே தெரிவித்துள்ளார். வாய்மூல விடைக்கான எதிர்பார்ப்புடன் நேற்று (19) பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீரவினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் நலின் ஹேவகே ...
இந்தியா சீனி ஏற்றுமதியை நிறுத்துவதற்கு எடுத்துள்ள தீர்மானம் காரணமாக, ஏனைய நாடுகளிலிருந்து சீனியை இறக்குமதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பிரேசில், தாய்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து சீனியை இறக்குமதி செய்வது குறித்து தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் ...
கடந்த நாட்களில் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்கான மதிப்பீடுகளுக்குப் பின்னர், சேத விபரங்களுக்கு அமைய ஹெக்டேர் ஒன்றுக்கு அதிகபட்சமாக ஒரு இலட்சம் ரூபா வரை இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. இதன்போது நெல், சோளம், உருளைக்கிழங்கு, சோயா, மிளகாய் மற்றும் ...
எரிபொருள் விநியோகத்திற்காக விதிக்கப்பட்டுள்ள QR குறியீடு முறைமை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். நேற்று (19) பாராளுமன்றத்தில் இது குறித்து கருத்துத் தெரிவித்த அவர், எரிபொருள் நுகர்வை இயன்றவரை குறைக்கும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
அமெரிக்காவின் சென்டியாகோவிலுள்ள மிகப்பெரிய பள்ளிவாசல் ஒன்றில் அந்நாட்டு நேரப்படி நேற்று முனத்தினம் (18) இரவு 11.53 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, இந்தத் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்களின் சடலங்கள் பள்ளிவாசலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றினுள் ...
இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 15,000 முதல் 18,000 வரையிலான புதிய புற்றுநோயாளிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டு வருவதாக விசேட வைத்திய நிபுணர் புத்திக சோமவர்தன தெரிவித்துள்ளார். அவர்களில் சுமார் 2,000 பேர் குருதிப் புற்றுநோயினால் (Blood Cancer/Leukaemia) பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். எலும்பு மஜ்ஜை மாற்று ...
17ஆம் தடவையாக நாளை (19) அனுஷ்டிக்கப்படும் யுத்த வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய முப்படைகளின் 5,289 பேருக்கு அவர்களது அடுத்த பதவிநிலைகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளது. தேசிய யுத்தவீரர்கள் நினைவு தினம், நாட்டில் அமைதியை ...