இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே மற்றும் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தேவப்பிரிய அபேசிங்க ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கைக்கு புறம்பாக ஆறு பணியாளர்களை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் (SLRC) இணைத்துக்கொண்டமை மற்றும் அவர்களை முன்னாள் அமைச்சர் ...
இன்று முதல், மறு அறிவித்தல் வரை அவசர தேவை உள்ளவர்களுக்கு மாத்திரமே தேசிய அடையாள அட்டையை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சிக்கல்களே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுள்ளது. அதன்படி, கணினி கட்டமைப்பை சீரமைத்து இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான முயற்சிகள் தற்போது ...
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதால், நோயாளர்கள் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் நாடு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. அதிலும் வளைகுடாப் போர் காரணமாக எரிபொருள் விலையேற்றம் மற்றும் அதனூடு ஏனைய பொருட்களுக்கான விலை அதிகரிப்பு என்பன மக்களின் இயல்பு வாழ்க்கையை நெருக்கடிமிக்கதாக ...
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ப்ரைட் ரைஸ் கொத்து உள்ளிட்ட உடனடி உணவுகளின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன. 20 ரூபாவினால் உணவுகளின் விலை அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை தேங்காய் எண்ணெயின் விலை குறைவடைந்ததையிட்டு சிற்றுண்டிகளின் விலையை 10 ரூபாவினால் குறைக்க ...
நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 20 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் வட மாகாணங்களுக்கும், காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை ஆகிய ...
தேசிய கல்வியியற் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்தவும் அவற்றை மறுசீரமைக்கவும் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி தலைமையிலான இந்த குழுவில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அரோஷா அதிகாரம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பூபாலசுந்தரம் ஐங்கரன் மற்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட விரிவுரையாளர் பி.ஏ.டி அனில் ...
சுமார் 11 கோடியே 34 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தி வந்த நபர் ஒருவர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, கொம்பனித்தெரு பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே கைது ...
தாய்லாந்தில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தகுதிகாண் ஹாக்கி தொடரில், இலங்கை ஆண்கள் அணி பங்களாதேஷை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் (2006-க்குப் பிறகு) பங்களாதேஷிற்கு எதிராக இலங்கை பெற்ற முதல் வெற்றி இதுவாகும். ஏற்கனவே உஸ்பெகிஸ்தானை (3-1) வீழ்த்தியிருந்த இலங்கை ...
“பயங்கரவாத” செயல்களில் ஈடுபட்டு இஸ்ரேலியர்களைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்படும் பாலஸ்தீனியர்களுக்கு இஸ்ரேலிய இராணுவ நீதிமன்றங்கள், மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டமூலத்தை இஸ்ரேல் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இந்தச் சட்டத்தின்படி, யூத இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனியர்களைக் கொலை செய்தால் அவர்களுக்கு இந்தத் தண்டனை பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை பாரபட்சமான ...
தெற்கு அதிவேக வீதியில் வெலிப்பன்ன பகுதிக்கு அருகில், முன்னால் பயணித்த கெண்டைனருடன் பின்னால் வந்த லொறி ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் லொறியின் சாரதி உயிரிழந்தார். இச் சம்பவம் இன்று (06) காலை இடம்பெற்றுள்ளது. தொடாங்கொடை மற்றும் வெலிப்பன்ன ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட 40 ஆவது ...