‘சாகரிகா’ ரயில் 24ஆம் திகதி தடம் புரண்டு மீண்டும் சீர்செய்யப்பட்டு கொழும்பு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போது, கொம்பனித்தெரு ரயில் நிலையத்திற்கு அருகில் மீண்டும் தடம் புரண்டுள்ளது. நேற்று மாலை 06.20 மணியளவில் இந்தத் தடம் புரள்வு ஏற்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக கடற்கரை மார்க்கமான ரயில் பாதையின் ஒரு வழித்தடம் ...
வவுனியா வடக்கு பிரதேசசெயலாளர்பிரிவில், பரந்தன் கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட மதியாமடு பகுதியில் அமைந்துள்ள சமூக நீர் பாவனையாளர் அமைப்பிற்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது 2026ஆம் ஆண்டிற்குரிய பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து 200,000ரூபாய் நிதியை ஒதுக்கீடுசெய்துள்ளார். குறித்த மதியாமடு மூக நீர் பாவனையாளர் அமைப்பின் கோரிக்கைக்கு ...
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலம் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 31 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குருநகர் பகுதியில் வைத்து இவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படும்போது இவரிடம் 2 கிராம் 35 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ...
திறைசேரியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடியானது நுணுக்கமான இணையவழித் தாக்குதல் அல்ல என்றும், அது அதிகாரிகளின் அடிப்படை அலட்சியத்தினால் ஏற்பட்ட விளைவு என்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா விமர்சித்துள்ளார். பாரியளவிலான நிதிப் பரிமாற்றங்களின் போது பின்பற்றப்பட வேண்டிய முறையான நிதித் தணிக்கைகள் மற்றும் ...
கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 110 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் நேற்று சனிக்கிழமை இரவு நடத்திய சோதனையின்போது இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. பாடசாலை பொருட்கள் மற்றும் பலவகையான ...
முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட முள்ளியவளை பகுதியில், பொது சுகாதார பரிசோதகர்களின் அதிரடி நடவடிக்கையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பிரபல உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள குறித்த உணவகம் சுகாதார விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பொது சுகாதார பரிசோதகர் கஜலவனால் ...
புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட வள்ளிபுனம், தேவிபுரம், உடையார்கட்டு மற்றும் கோம்பாவில் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய 11 விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, மொத்தமாக 2 இலட்சத்து 35 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் மூன்று ...
இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய டிஜிட்டல்மயமாக்கல் திட்டத்திற்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இதன்மூலம் பொதுமக்கள் பாதுகாப்பை மேம்படுத்தவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் அட்டைகளை இல்லாமல் செய்வதன் ஊடாக சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கும் பங்களிப்பாற்ற ...
கோழிப்பண்ணை உரிமையாளர் ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட அதிகாரி ஒருவருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு, மொனராகலை மாவட்டம் வெல்லவாய பகுதியில் உள்ள கோழிப்பண்ணை உரிமையாளர் ஒருவரிடம், இந்த அதிகாரி சட்ட விவகாரங்களைச் சாதகமாக ...
கனடாவின் மேனிடோபா மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புற பாடசாலைக்கு துப்பாக்கி மற்றும் கத்திகளுடன் வந்த பதின்ம வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேனிடோபா க்ருந்தல் (Grunthal) பகுதியில் உள்ள ‘கிரீன் வேலி’ (Green Valley) பாடசாலைக்கு ஆயுதங்களுடன் ஒரு சிறுவன் வருவதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதனைத் ...