நேற்றயதினம் யாழில், கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே விழுந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது காங்கேசன்துறை வீதி, நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த இராசதுரை பகவான்தாஸ் (வயது 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கறிவேப்பிலை பறிப்பதற்கு சென்று மரத்தில் ...
அம்பாந்தோட்டை, சூரியவெவ பிரதேசத்தில் நேற்று இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் சண்டையாக மாறியுள்ளது. இந்த மோதல் முற்றிய நிலையில், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சூரியவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ...
குருநாகல், கல்கமுவை பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். கல்கமுவை பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த ஹயஸ் வாகனமும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற பெண்ணே ...
இந்த வருட இறுதிக்குள் முக்கிய புள்ளிகள் பலர் சிறையில் அடைக்கப்படுவார்கள். எந்தவொரு தராதரமும் பாராமல் சட்டம் அனைவருக்கும் சமம் என்ற அடிப்படையில் நடைமுறைப்படுத்துவோம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் நேற்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மேதின கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இந்த ...
நிதியமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்சவின் மரணம் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். குறித்த இரண்டு பொலிஸ் குழுக்களும் இரண்டு பிரதம பொலிஸ் ஆய்வாளர்களின் மேற்பார்வையின் கீழ் களமிறக்கப்பட்டுள்ளன. ரங்க ராஜபக்சவின் உடலம் ...
சுகாதாரத் துறையினரின் பாதுகாப்பு தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் நிலையில், பெண் வைத்தியர்களின் கௌரவத்தைப் பாதுகாக்க சுகாதார அமைச்சு தவறிவிட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கொழும்பில் ...
திறைசேரியினால் அவுஸ்திரேலிய கடன் வழங்குநருக்கு அனுப்பப்பட்ட 2.5 மில்லியன் டொலர்கள் காணாமல் போனமை தொடர்பில், நிதியமைச்சுக்கு ஒரு மாதக்கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அரச நிதி பற்றிய பாராளுமன்ற குழுவின் தலைவர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். முன்னதாக, அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு சம்பந்தப்பட்ட தரப்பினருக்குச் செலுத்தப்பட வேண்டிய 10 ...
வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த பிக்குகளுக்கான கட்டுப்பாடுகளை இலங்கை அரசு மேலும் கடுமைப்படுத்தியுள்ளது. புதிய நடைமுறைகளின் படி, வெளிநாடுகளுக்குச் செல்லும் பௌத்த பிக்குகள் தங்களது மூத்த பிக்கு, பிராந்திய பௌத்த தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஆகியோரிடமிருந்து பரிந்துரைகளை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் முன்பே ...
காரைநகர் கசூரினா கடற்கரையை நவீன வசதிகளுடன் கூடிய ஒரு சிறந்த சுற்றுலாத் தளமாக மாற்றியமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜே.விவேகானந்தன் தெரிவித்துள்ளார். இயற்கை இந்த வெள்ளை மணல் கடற்கரைக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை ...
2026 ஆம் ஆண்டிற்கான உலக ஊடக சுதந்திர சுட்டெண்ணில் இலங்கை ஐந்து இடங்கள் முன்னேறி, 180 நாடுகளில் 134 வது இடத்தைப் பிடித்துள்ளது. இதில் இலங்கையின் உலகளாவிய புள்ளி 40.77 ஆகும். எல்லைகளற்ற செய்தியாளர்கள் (RSF) அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் 139 வது இடத்தில் ...