‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜூன் மாதத்திற்குரிய கொடுப்பனவுகளை இன்று (18) வழங்குவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இதற்கமைய, 1,373,248 பயனாளி குடும்பங்களுக்காக 10,904,801,250.00 ரூபாய் பணம் நாளை சம்பந்தப்பட்ட பயனாளிகளின் வங்கி கணக்குகளில் ...
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபரை தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், சந்தேகநபருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் விதிப்பதாக ...
கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று, சுற்றுலா மேம்பாட்டு பணியக நிதி முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவுக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு இன்று மீண்டும் ...
இந்திய அரசாங்கத்தினால் இலங்கை இராணுவத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட இராணுவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்று (16) ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தின் இராணுவ தலைமையகத்தில் நடைபெற்றது. இந்திய அரசாங்கத்தின் உதவித் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட, 5 மில்லியன் ...
ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணை இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆரம்பமானது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (17) காலை, இலங்கை கடற்படை மற்றும் பிரித்தானிய கடற்படை அகாடமியில் இணைந்தது தொடர்பான விசாரணை ஒன்றுக்காக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விடுத்திருந்த அறிவித்தலுக்கு ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 23 திருக்கோணேச்சரம் ஆலயத்தின் புனரமைப்புப் பணிகளுக்கு தொல்லியல் திணைக்களம் தடையாக உள்ளதென்ற கருத்தை இவ்விடத்தில் எழுதிய பேனா மை காய்வதற்கு முன்னதாக, முல்லைத்தீவு குருந்தூர் மலையில் சிவனாலயம் இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என பெளத்தசாசன அமைச்சுக்கு தொல்லியல் திணைக்களம் தெரிவித்துள்ளது எனும் ...
மகளிர் இருபதுக்கு -20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் விறுவிறுப்பான 7ஆவது லீக் போட்டியில், நியூசிலாந்து மகளிர் அணியை 5 விக்கெட்டுகளால் வீழ்த்தி இலங்கை மகளிர் அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. சவுதாம்ப்டனில் உள்ள ‘தி ரோஸ் போல்’ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி ...
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் கீழ், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைக் கைது செய்வதைத் தடுக்கும் வகையில் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பாக, சட்டமா அதிபர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள எதிர்மனுதாரர்களிடம் இருந்து இதுவரையில் ...
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் பூனாவை, கல்கந்தேகம பகுதியில் இன்று (17) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பூனேவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுரைச்சோலை பகுதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி மீனவர்கள் குழுவினர் பயணித்த லொறி ஒன்று வீதியில் நிறுத்தப்பட்டிருந்த போது, ...