மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட தரநிலைப்படுத்தப்பட்ட பதிவு இலக்கத் தகடுகளை மாற்றியமைத்து வாகனங்களைச் செலுத்துவோருக்கு எதிராகச் சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பொறுப்பு பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனதீர இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.புதிதாகப் பதிவு ...
குருநாகல் – நிக்கவரெட்டிய – தெதுரு ஓயாவில் நீராடச்சென்று காணாமல் போன மேலும் நால்வரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன தெதுறு ஓயாவில் நேற்று வியாழக்கிழமை (16) நீராடச் சென்ற 15 பேரில் 10 பேர் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானார்கள். நீரில் மூழ்கி காணாமல் போனவர்களில் மேலும் 4 பேரின் சடலங்கள் ...
இலங்கையில் நீண்டகாலமாகத் தாமதமடைந்து வரும் மாகாண சபைத் தேர்தல்களை இந்த ஆண்டுக்குள் நடத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க சட்டத்தின்படி அறிமுகப்படுத்தப்பட்ட கலப்பு விகிதாசார தேர்தல் முறையை நடைமுறைப்படுத்துவதில் பாரிய சிக்கல் ...
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வைத்து வன்முறை குழுவை சேர்ந்த மூவர் நேற்று வாள்களுடன் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மூவரும் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் தாக்குதல் நடாத்துவதற்கு தயாரிகினர். இது குறித்து சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. அந்தவகையில் அதிரடி ...
குருநாகல் – நிக்கவரெட்டிய பகுதியில் தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற இருவர் உயிரிழந்ததுடன், 6 பேர் காணாமல் போயுள்ளனர். நேற்று (16) மாலை 15 பேர் நீராடச் சென்ற போதே இத்துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. நீரில் மூழ்கி உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீராடச் சென்ற ...
நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டு வந்த சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் ஆறு சீனப் பிரஜைகள் இன்று வியாழக்கிழமை (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்கப் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...
மத்திய கிழக்கில் போர் மோதல்கள் ஆரம்பமானதன் பின்னர், கச்சா எண்ணெயுடன் வரும் முதலாவது கப்பல் நாளை (17) நாட்டை வந்தடைய உள்ளதாக இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கப்பல் மூலம் 97,500 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக அதன் முகாமை ...
கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சிக்கல் காரணமாக நாளை 17 ஆம் திகதி பொதுமக்களுக்கான எந்தவித சேவைகளும் முன்னெடுக்கப்பட மாட்டாது என ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு பத்தரமுல்லையில் உள்ள தலைமை அலுவலகம் மற்றும் நாடளாவிய ரீதியிலுள்ள ஏனைய பிராந்திய அலுவலகங்களிலும் நாளை பொதுமக்களுக்கான சேவைகள் முன்னெடுக்கப்படாது ...
அன்னை பூபதியின் 38ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படம் தாங்கிய ஊர்தி இன்று (16) காலை திருகோணமலை சிவன்கோவிலடியை வந்தடைந்தது. இதன்போது பொதுமக்கள் அன்னாரது உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, தீபச் சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து திருகோணமலையின் முக்கிய பகுதிகளிலும் அவருடைய உருவப்படத்திற்கு ...
நாட்டில் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலைகளை, போர்ச் சூழல் தணிந்தவுடன் கூடிய விரைவில் குறைக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாட்டில் எரிபொருள் மற்றும் மின்சார விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும் எனவும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். களுத்துறை பகுதியில் ஊடகங்களிடம் ...