பளை, தர்மக்கேணி அ.த.க பாடசாலையில் கல்வி பயிலும் 17 வயது மாணவன்காணாமற் போயிருந்த நிலையில் 6 நாட்களின் பின்னர் புலோப்பளை கடல்நீரேரியில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பளை, முள்ளியடியைச் சேர்ந்த ஆர். அனோச் (வயது – 17) என்ற மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புலோப்பளை கடல்நீரேரியில் நேற்று ...
வவுனியா, செட்டிகுளம் பிரதேச சபையில் கடமையாற்றும் இளம் யுவதி ஒருவர் கிணறு ஒன்றில் விழுந்து மரணமடைந்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, செட்டிகுளம், துடரிக்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இளம் யுவதி ஒருவரை காணவில்லை என தேடிய போது உறவினர்கள் அவரை வீட்டு கிணற்றில் அவதானித்துள்ளனர். இதனை ...
ஜாஎல பகுதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஒருவருக்கு மீண்டும் கொரோனா தொற்றுத் தாக்கம் இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. மார்ச் 17ஆம் திகதி அங்கொடவில் உள்ள ஐ.டி.எச் மருத்துவ மனையில்அனுமதிக்கப்பட்ட அவர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்றதன் பின்னர் குணமடைந்தார். பின்னர் ஏப்ரல் 17ஆம் திகதி அன்று வீடு திரும்பினார் ...
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சுகாதாரத்துறையினர் தவறான தகவல்களையோ அல்லது உண்மைக்குப் புறம்பான தகவல்களையோ ஒரு போதும் வெளியிடமாட்டார்களென சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு பணிப்பாளர் பபா பலிஹவதன தெரிவித்தார். அவர்கள் உண்மைகளை மறைத்து தகவல்களை வெளியிடுவதாக சில ஊடகங்கள் மூலம் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த அவர் அதற்கான ...
எதிர்வரும் 4ஆம் திகதி திங் கட்கிழமை அலரி மாளிகையில் நடக்கவிருக்கும் கலந்துரையாடலுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) நிராகரித்துள்ளது. ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தமது நிலைப் பாட்டை விளக்கி நேற்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அதில், ஜே.வி.பியின் எம்.பிக்கள் கூட்டத்தில் கலந்து ...
நீர்வேலியில் ஊரடங்கு அமுலிலிருந்த வேளையில் முகமூடி அணிந்து வாள்களுடன் சென்ற நான்கு பேர் கொண்ட கும்பல் வீட்டிலிருந்தவர்களைக் கடுமையாக அச்சுறுத்தியும் தாக்கியும் மூன்று வீடுகளில் கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளது. குறித்த கொள்ளைச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு நடந்துள்ளது. வீடொன்றில் மூன்று இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணமும் இன்னொரு ...
பொலிஸ் அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரங்கள் சாரதிகள் மற்றும் வாகனங்களில் பயணம் செய்வோர் முகக்கவசங்கள் அணிந்திருந்தால் மட்டுமே செல்லுபடியாகும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று இரவு வெளியிட்ட ஊடக அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ...
பொலிஸாரின் மூர்க்கத்தனமான தாக்குதலில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் படுகாய மடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளிக் கிழமை குடத்தனை, மாளிகைத்திடல் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குடத்தனை மாளிகைத்திடல் பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டுக்கு நேற்று முன்தினம் வியாழக்கிழமை சென்ற பருத்தித்துறை பொலிஸார் ...
உழைக்கும் மக்களுடன் சேர்ந்து கடந்த காலத்தின் அனைத்து கஷ்டமான சந்தர்ப்பங்களையும் வெற்றி கொண்ட நாம் கோவிட்-19ஐயும் வெற்றிகொள்வோம் என்பது உறுதி என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எமது அரசாங்கம் எத்தகைய கஷ்டமான நிலைமையிலும் கூட நாட்டின் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க் கையை சீர்குலைத்த தில்லை. அத்தகைய நிலைமைக்கு ...
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்திய மூர்த்திதெரிவித்துள்ளார். முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த ஐஎலவைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி பெண் ஏப்ரல் 11ஆம் திகதி முழங்காவிலில் தனிமைப் படுத்தல் ...