இன்று (16) காலை ரயில் விபத்து இடம்பெற்ற இடத்தில், ரயில் தண்டவாளத்தில் ஆணிகளைக் கழற்றியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொட பொலிஸாரினால் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் கடுமையான போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தண்டவாளத்தில் ...
மாத்தறை, வெலிகமை பிரதேசத்தில் முச்சக்கர வண்டி வீதியில் தடம்புரண்டு இடம்பெற்ற விபத்தில் 4 வயதுச் சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். மேற்படி சிறுவன் நேற்று முன்தினம் இரவு தனது பெற்றோருடன் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போதே, அந்த முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டை இழந்து வீதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. ...
மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோவில் மீண்டும் இபோலா வைரஸ் தாக்கம் உச்சமடைந்துள்ளது. 17 ஆவது முறையாக எபோலா வைரஸ் பரவியுள்ள நிலையில், தொற்றினால் இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். இபோலா வைரஸ் தாக்கம் கொங்கொவில் காலத்திற்கு காலம் தாக்கம் செலுத்தி வருகிறது. இறுதியாக, கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் ...
யாழ்ப்பாணம், சுன்னாகம் – புத்தூர் வீதியானது இன்றும் (16) நாளையும் (17) தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என வட பகுதி ரயில்வே பாதை மற்றும் பராமரிப்புத் திணைக்கள பொறியியலாளர் ஜி.கே. சதுரேனோ அறிவித்துள்ளார். சுன்னாகம் – புத்தூர் வீதியில் அமைந்துள்ள ரயில்வே கடவை அவசரமாக மறுசீரமைக்கப்பட வேண்டியுள்ளதால், இந்த நடவடிக்கை ...
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்குரிய சுங்க இறக்குமதி வரியின் மீது 50% மேலதிக வரியை விதிப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனம் ஒன்றுக்காக இதுவரை விதிக்கப்பட்ட 30% சுங்க இறக்குமதி வரியின் மீது மேலும் 50% மேலதிக வரி விதிக்கப்படும். ஜனாதிபதி அநுர குமார ...
நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக 141 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த 10ஆம் திகதி முதல் இன்று (16) வரையான காலப்பகுதிக்குள் இந்த அளவிலான பகுதியளவு சேதமடைந்த வீடுகள் பதிவாகியுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், இந்த அனர்த்த நிலைமை ...
இன்று (16) அதிகாலை வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய இடையே ரயில் மார்க்கத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டு, பயணிகள் பெட்டி ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 12 பயணிகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள தனியார் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், அவர்களில் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு ...
இன்றைய தினத்தின் புதிய தரவு பகுப்பாய்வுகளின்படி, இலங்கைக்கு வடகிழக்கே அமைந்துள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த அமைப்பின் நடத்தை, வளர்ச்சி மற்றும் நகரும் பாதை குறித்து திணைக்களம் தொடர்ந்து அவதானித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் தாக்கம் காரணமாக, மேல், சப்ரகமுவ, ...
ஆகஸ்ட் மாதம் வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், இந்த ஆண்டின் எஞ்சிய மாதங்களுக்கான எரிபொருள் தேவைக்கான கோரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அரச சேவையை முறையாக முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் ஆறாவது கூட்டம் நேற்று (15) கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் ...
ஆசிரியர் சேவையை இந்நாட்டின் அதிக சம்பளம் பெறும் முதல் 10 தொழில்களுக்குள் கொண்டு வருவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். வனாதவில்லுவ, நாகமடுவ மகா வித்தியாலயத்தின் புதிய வகுப்பறை கட்டிடத்தை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் ...