2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் இன்று (24) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்ளை தற்போது நிகழ்நிலை ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் இன்று நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் விண்ணப்பிக்க முடியாது என அந்த திணைக்களம் ...
இலங்கையில் முட்டை உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளதன் காரணமாக, சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குளியாப்பிட்டிய பகுதியில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அச்சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க, சந்தை நிலவரம் குறித்து விளக்கமளித்தார். அவர் தெரிவிக்கையில், ...
அநுராதபுரம் – அசரிக்கம பகுதியில் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பரசங்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர். இத் துயர சம்பவம் நேற்று (22) மாலை இடம்பெற்றுள்ளது. அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடமையாற்றும், 31 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருக்கும்போதே அவர் மின்னல் தாக்கத்திற்கு ...
குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (23) பிற்பகல் 4:00 மணி முதல் இன்று (24) பிற்பகல் 4:00 மணி வரை இந்த மண்சரிவு ...
இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டிருந்த தட்டம்மை நோய் மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை தட்டம்மையை முற்றாக ஒழித்த நாடு என 2019ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருந்தது. எனினும், 2023ஆம் ஆண்டிற்குப் பிறகு நாட்டின் சில பகுதிகளில் மீண்டும் ஆங்காங்கே தட்டம்மை நோயாளர்கள் ...
அல்லைப்பிட்டியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் சிறுவன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நம்பிக்கை தரும் வகையில் விசாரணைகளை முன்னெடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்து, நீதிமன்றில் முற்படுத்துமாறு, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் அனீபா ரஜீவ் மத்திய குற்ற புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுளளார். அல்லைப்பிட்டி ...
2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட போதிலும், ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி செயல்திறன் வலுவாக உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. ஜனவரி முதல் மார்ச் வரையிலான மொத்த ஏற்றுமதி வருமானம் 4,308.11 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் ...
கந்தளாய், வென்றாசன்புர குளத்திற்கு அண்மித்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், T-56 ரகத் தோட்டாக்கள் கந்தளாய் பொலிஸார் இன்று (23) மீட்கப்பட்டன. இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, கந்தளாய் அவசர பொலிஸ் பிரிவினருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கந்தளாய் தலைமையகப் ...
சைபர் குற்றவாளிகளால் நிதி அமைச்சிலிருந்து அபகரிக்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களில், முடிந்தவரை பெருமளவான தொகையை மீண்டும் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்துள்ளார். அமைச்சின் மண்டபத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். ஹெக்கர்கள் ...
ரித்தானிய பாராளுமன்றத்தில் புகைத்தல் தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இலண்டனில் 17 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய சிறுவர்கள் வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புகைப்பழக்கமற்ற ஒரு தலைமுறையை உருவாக்கும் நோக்கில் கடைகளில் புகையிலை விற்பனை செய்வதை சட்டவிரோதமாக்குவதன் ...