பொலிஸாரின் மூர்க்கத்தனமான தாக்குதலில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் படுகாய மடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளிக் கிழமை குடத்தனை, மாளிகைத்திடல் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குடத்தனை மாளிகைத்திடல் பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டுக்கு நேற்று முன்தினம் வியாழக்கிழமை சென்ற பருத்தித்துறை பொலிஸார் ...
உழைக்கும் மக்களுடன் சேர்ந்து கடந்த காலத்தின் அனைத்து கஷ்டமான சந்தர்ப்பங்களையும் வெற்றி கொண்ட நாம் கோவிட்-19ஐயும் வெற்றிகொள்வோம் என்பது உறுதி என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எமது அரசாங்கம் எத்தகைய கஷ்டமான நிலைமையிலும் கூட நாட்டின் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க் கையை சீர்குலைத்த தில்லை. அத்தகைய நிலைமைக்கு ...
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்திய மூர்த்திதெரிவித்துள்ளார். முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த ஐஎலவைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி பெண் ஏப்ரல் 11ஆம் திகதி முழங்காவிலில் தனிமைப் படுத்தல் ...
எரிபொருட்களை இறக்குமதி செய்வதனை இலங்கை அரசாங்கம் இடைநிறுத்திக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக தற்பொழுது கையிருப் பில் உள்ள எரிபொருட்கள் பயன்படுத்தப்படு வதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாத காலத்திற்கு எரிபொருட்கள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன களஞ்சிய நிறுவனத்தின் தலைவர் ...
காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் பயணித்த இ.போ.ச பேருந்து காரைநகர் -பொன்னாலை வீதியில் கடலுக்குள் பாய்ந்ததில் நடத்துனர் காயமடைந்தார். இச் சம்பவம் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இடம் பெற்றுள்ளது. காரைநகர் – யாழ்ப்பாணம் 782 வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்ட காரைநகர் சாலைக்குச் சொந்தமான பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.
யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் இன்று முதல் கடும் மழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ள தாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் தென்கிழக்காக அந்தமான் கடற்பிராந்தியத்தை இணைந்ததாக இன்று வியாழக்கிழமை முதல் தாழமுக்க பிராந்தியம் உருவாகக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக வானிலை அவதான நிலைய அதிகாரி ...
யாழ்ப்பாணம் – அராலி துறையில் உள்ள இராணுவ முகாமில் வெளியிலிருந்து கொண்டு வரப்பட்டவர்களுக்கான தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். அராலி துறையில் அமைந்துள்ள இராணுவ முகாமில் நேற்று முன்தினம் தொடக்கம் குறித்த இராணுவ முகாமில் தங்கியிராத வெளியாட்கள் தொடர்ச்சியாக அழைத்து வரப்பட்டு தனிமைபடுத்தப்பட்டுள்ளதாகத் ...
கம்பஹா பொது வைத்திய சாலையின் பணிப்பாளர் உள்ளிட்ட 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட ஒருவர் அண்மையில், கம்பஹா வைத்தியசாலைக்கு சென்று பணிப்பாளரை சந்தித்து பேசியிருந்தார். இதையடுத்தே பணிப்பாளர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் இன்று வியாழக்கிழமை இரவு 8 மணி தொடக்கம் எதிர்வரும் மே 4ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இதன்படி வெள்ளி, சனி, ஞாயிறு தினங்கள் நாடு முழுவதும் முடக்கப்பட்டிருக்கும்.
கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையுடன் தொடர்புடைய கைது சம்பவங்கள் நாட்டின் சட்டங்களுக்கு அமைவானதாக இருக்க வேண்டும் என, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடுகம, பதில் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியுள்ளகடிதத்தில் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் போலியான தகவல்களை பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் அண்மை யில் ...