கொரோனா வைரஸ் பரவலானது எதிர்வரும் இரு வார காலத்துக்குள் இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விதிமுறை களும் கட்டுப்பாடுகளும் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அறிவுறுத்தல் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் குறித்து, சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய ...
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான நடவடிக்கைகளை அரசாங்கம் பின்பற்றாவிட்டால் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. மேலும் வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்துவது எளிதல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள அரச ...
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்த நபருக்கு கொரோனோ தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை அதிகாலை பருத்தித்துறை கந்த உடையார் ஒழுங்கையை சேர்ந்த 53 வயதுடைய நபர் ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சில மணிநேரத்தில் ...
யாழ்.மாவட்டத்தில் தொடர் ஊரடங்கினால் அத்தியாவசிய பொருட்களின் திடீர் விலை உயர்வு, தட்டுப்பாடு மற்றும் பதுக்கல் தொடர்பான முறைப்பாடுகளையடுத்து பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் விசாரணை உத்தியோத்தர்களினால் நேற்று பல விற்பனை நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அத்துடன் நியாயமான விலைகளில் மக்களுக்கு பொருட்கள் கிடைப்பதற்கான வழி வகைகள் மேற்கொள்ளப்பட்டு வர்த்தக ...
அத்தியாவசிய நுகர்வு பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மீது ஊரடங்குச்சட்ட விதிகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உல்லாசபயண விமான போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். கம்பஹா செயலகத்தில் இடம்பெற்ற அரச அதிகாரிகளின் உயர்மட்ட கலந்துரையாட லின் போது ...
அமெரிக்காவின் நியூயோர்க் சிட்டியிலுள்ள வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் புலிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவில் தான் கொரோனா தற்போது அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் நேற்றுக் காலை நிலவரப்படி சுமார் 3 இலட்சத்து ...
நியூயோர்க் மாகாணத்தில் கொரோனா வைரஸிக்கு 2 நிமிடத்துக்கு ஒருவர் வீதம் பலியாகி வருகின்றனர். அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின்; எண்ணிக்கை 4 இலட்சத்தை நெருங்கி வருகிறது. இதே வேளை பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கிவருகிறது. நியூயோர்க் மாகாணம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா வைரஸிக்கு பலியானோர் ...
யாழ்ப்பாணம், கோண்டாவில் டிப்போவில் தரித்து நின்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்த மான ஆறு பேருந்துகளில் டீசல் திருடப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இலங்கை போக்கு வரத்துச் சபையின் ...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வாள்வெட்டுக்கள் மற்றும் வன்முறைகளுடன் தொடர்புடைய ஆவா என பொலிஸாரால் விழிக்கப்படுபவரின் பிறந்தநாளைக் கொண்டாடியவர்கள் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர் உள்ளிட்ட பலர் தப்பித்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டம் மல்லாகத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. ஆவாவின் பிறந்தநாள் ...
சந்தேகநபர்களை கைது செய்ய சென்றமையால், கொரோனா அச்சத்தில் ஒரு பொலிஸ் பொறுப்பதிகாரி, ஒரு குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட 38 பொலிஸார் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஜா-எல, பமுனுகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, கெக்கிராவ பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 38 பேரே ...