சாவகச்சேரி – மட்டுவில் பகுதியில் நேற்றுத் திங்கட்கிழமை காலை வீதியில் வாள்களுடன் நின்று அட்டகாசம் புரிந்த இருவர் ஊர்மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மது போதையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வாள்களுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதனையடுத்து பொதுமக்கள் அவர்கள் இருவரையும் பிடித்து ...
மன்னார் பிரதான புகையிரத நிலையப் பகுதி கொரோனா பரவல் அச்சம் காரணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் எதிர்வரும் 14 நாட்கள் மூடப்பட்டுள்ளதுடன் குறித்த புகையிரத நிலைய ஊழியர்களும் பாதுகாப்பு காரணங்களுக்காக புகையிரத நிலையத் திலே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வவுனியா, பெரியகாடு இராணுவ புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து கொரோனா சந்தேகநபர் ஒருவர் ...
எந்தப் பாராளுமன்ற உறுப்பினரும் கதைக்காத ஒரு விடயத்தை எமது முன்னாள் முதலமைச்சர் உரக்கச் சொல்லி இருக்கின்றார். முதற்கண் அதற்கு தலைவணங்குகிறேன். அவருக்கு பக்கபலமாக நான் எப் போதும் இருப்பேன் என வட மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்திருக்கின்றார். சி.வி.விக்னேஸ்வரன் மீது டெனீஸ்வரன் தொடுத்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ...
பணம் கொடுக்க தாய் மறுத்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞன் ஒருவர் குப்பிழான் வடக்குப் பகுதியில் மரணமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக் கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு குறித்த இளைஞன் தாயிடம் பணம் கேட்டுத் தொந்தரவு செய்துள்ளார். எனினும், தாயார் ...
வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில், வவுனியா பூம்புகார் பகுதியில் இருந்து ஈச்சங்குளம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் நொச்சிக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அதே திசையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த மாணவனுடன் மோதியதிலேயே ...
வவுனியா பெரியகாடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வெளி நாட்டிலிருந்து விசேட விமானத்தில் அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்த சிலாபம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு தப்பி ஓடியுள்ள நிலையில் குறித்த நபர் நேற்று சனிக்கிழமை மாலை மன்னார் சௌத்பார் புகையிரத நிலைய ...
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் மக்களிடம் அபிப்பிராயம் கோரப்படாமல் நிறைவேற்றப்பட்டமையால், மக்களிடம் அபிப்பிராயம் கோராமலேயே அதில் திருத்தங்களைச் செய்யமுடியும் என்று முன்வைக்கப்படுகின்ற தர்க்கம் நியாயமானதாகும். ஆனால் இறையாண் மையைப் பலப்படுத்துவ தற்கு மக்களிடம் அனுமதி பெறத் தேவை யில்லை. மாறாக அதனை வலுவிழக்கச் செய்வதெனின் நிச்சயமாக மக்களிடம் அனுமதி கோர ...
நேபாளத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்படுகின்றன. இந்நிலையில், கனமழை காரணமாக சிந்துபால்சவுக் மாவட்டத்தில் நேற்று இரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. மலை அடிவாரத்தில் உள்ள 18 வீடுகள் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டன. அந்த ...
வவுனியாவில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்களுடன் 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிதம்பரபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது 420 மில்லிகிராம் மற்றும் 310 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், தேக்கவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது ...
விடத்தற்பளைப் பகுதியில் தனிமையில் சென்ற ஆசிரியை ஒருவரின் ஒரு பவுண் நிறை கொண்ட சங்கிலி நேற்று சனிக்கிழமை மதியம் மோட்டார் சைக்கிளில் சென்ற திருடர்களால் அறுக்கப்பட்டது. கெற்பேலிப் பகுதியில் இருந்து விடத்தற்பளை நோக்கி தனது வீட்டிற்கு செல்லும் வழியில் ஆள் நடமாட்டம் குறைவான இடத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ...