கைப்பற்றப்பட்ட படகில் 400 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மீட்பு!
Share
தென் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு, இன்று (17) காலை திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருட்களின் சந்தை பெறுமதி சுமார் 400 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுநிலை) அருண ஜயசேகர கருத்து தெரிவிக்கையில், குறித்த மீன்பிடி படகில் ஆறு உரப் பைகளில் பொதி செய்யப்பட்ட நிலையில் இந்த ஹெரோயின் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.


