Type to search

Headlines News World News

ஈரானின் சமாதான உடன்படிக்கை முழுமையடைந்தது – ட்ரம்ப்

Share

ஈரானுடனான அமைதி உடன்படிக்கை தற்போது முழுமையடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

அவர் தமது ட்ருத் சமூக வலைத்தளத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

அதற்கமைய, ஹோர்முஸ் அருகே முன்னெடுக்கப்பட்டுள்ள அமெரிக்க கடற்படை முற்றுகையை உடனடியாக நீக்குவதற்கு தாம் இணங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதில் மத்தியஸ்தராகச் செயல்பட்ட பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை அதிகாலையில் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அறிவித்த சில நிமிடங்களிலேயே ட்ரம்பின் இந்தப் பதிவு வெளியானது. 

இந்த ஒப்பந்தம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திடப்படும் என்று ஷெரீப் குறிப்பிட்டுள்ளார். 

அதேநேரம் அமைதி புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் இறுதி செய்யப்பட்ட வரைவில் ஈரானும், அமெரிக்காவும் ஜூன் 19 ஆம் திகதி சுவிட்சர்லாந்தில் கையெழுத்திடும் என்று சட்ட மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான ஈரானிய துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரீபாபாடி தெரிவித்துள்ளதாக தஸ்நிம் செய்தி நிறுவனமும் தகவல் வௌியிட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link